செய்திகள் :

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?

post image

ஒரு மோசடி பற்றி மக்களிடமிருந்து புகார் வந்ததுமே, இவ்வாறு ஒரு மோசடி நடக்கிறது, மக்களே கவனம் என காவல்துறையினர் உடனடியாக எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் பலரும், நமக்கென்ன என்று இருந்துவிடுவதே, மோசடியாளர்களுக்கு வரப்பிரசாதமாக மாறி விடுகிறது.

எனவே, காவல்துறையினர் விடுக்கும் எச்சரிக்கைகளை என்னவென்று அறிந்து வைத்திருப்பது சாலச்சிறந்தது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில், மோசடியாளர்களிடம் 35 லட்சத்தை ஏமாந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலித்தது. நான் அனுப்பிய வெளிநாட்டுப் பார்சல் திரும்பிவந்துவிட்டதாக அந்த அழைப்பில் கூறப்பட்டது. அது பற்றி அறிய எண் 1ஐ அழுத்துமாறு கூறியது. நானும் அவ்வாறு செய்தேன், உடனடியாக ஒரு பெண் அழைப்பில் வந்து பேசினார்.

அவர் கொரியர் நிறுவன ஊழியர் என்றும், அந்த பார்சல் எண் மற்றும் என் ஆதார் எண்ணையும் கூறி, அந்த பார்சலில் போதைப் பொருள் இருப்பதாகவும் கூறினார்.

இதில் ஒரே ஒரு இடத்தில்தான் நான் ஏமாந்துபோனேன். அது என்னுடைய சரியான ஆதார் எண் என்று கூறியுள்ளார்.

நான் அந்த பார்சலை அனுப்பவில்லை என்று கூறியும், தொடர்ந்து எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, நான் டிஜிட்டல் அரஸ்ட் செய்யப்பட்டதாக ஏமாற்றப்பட்டு, மும்பை காவல்துறை என சிலர் என்னிடம் பேசி ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

மோசடியாளர்கள், ஒரு குற்றச்சாட்டால் ஏற்பட்ட பதற்றத்திலிருந்து விடுபடுவதற்குள், ஒரு அரசியல்வாதியின் பண மோசடி வழக்கிலும் தனக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி, அந்த அரசியல்வாதியின் புகைப்படத்தைத் தனக்கு அனுப்பியதாகவும், அவரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியும் அவர்கள் என்னை காவல்துறை அதிகாரி என நம்பவைத்து பணத்தை மோசடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு எத்தனையோ காவல்துறையினர் நண்பர்களாக இருக்கிறார்கள், ஆனால், அப்போது எனது மூளை எதையும் யோசிக்கவில்லை. அவர்கள் எனது வங்கிக் கணக்கு முழுவதையும் ஆராய்ந்து அந்த தொகையை முழுக்க முழுக்க தங்களது வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும், உங்கள் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கப்பட்டால், அந்தப் பணம் திரும்ப அளிக்கப்படும் என உறுதி அளித்தனர்.

நேரடியாக வங்கிக்குச் சென்று பணத்தை அனுப்பிவிட்டேன், ஆனால், பணம் திரும்பவரவில்லை. அப்போதுதான் காவல்நிலையம் சென்றபோது, இந்த டிஜிட்டல் அரஸ்ட் பற்றி எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறி அது சைபர் கிரைம் என்று கூறினார்கள். ஆனால், தான் இதுவரை எந்த எச்சரிக்கையையும் கேட்டதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

எனவே, சரியான ஆதார் எண்ணை ஒருவர் சொல்வதால் மட்டும் அவரை நம்ப வேண்டாம் என்றும், நமது பெயர் மட்டும் ஆதார் எண்ணை எங்கிருந்தும் பெற முடியும் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The problem is that criminals involved in digital arrest fraud are able to correctly cite an individual's Aadhaar number...

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

சேமிப்புத் திட்டங்கள், பங்குச்சந்தை முதலீடு என்று கூறி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கிலான மதிப்பில் நிதி சார்ந்த மோசடிகள் நடக்கின்றன.பணத்தை சேமிக்க வேண்டும், சேமித்து வைத்திருக்கும் பணத்தை பல மடங்காக பெர... மேலும் பார்க்க

இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!

இணையதளம் மூலம், திருமணத்துக்கான வரன் தேடுபவர்களை, சைபர் குற்றவாளிகள் எளிதாகக் குறி வைத்து மோசடி செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருமண வரன்களைப் பற்றி ஒரு சமூக மக்களுக்கு என ஒரு முகவர் இருப்பார். அ... மேலும் பார்க்க

சர்வதேச சுற்றுலாவுக்கு ஈடாக செல்போனைக் கேட்கும் கும்பல்! இப்படியும் ஒரு மோசடி

சைபர் குற்றவாளிகள், ஒவ்வொரு நாளும், மக்களை எவ்வாறு ஏமாற்றலாம், அவர்களது மிக சொற்ப சேமிப்பையும் எப்படி திருடலாம் என பலவாறு யோசித்து புதுப்புது உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள்.இதில், சைபர் குற்றவாளிகளி... மேலும் பார்க்க

புதிதாக வங்கி கிரெடிட்/டெபிட் அட்டைகள் பெறும்போது கவனம்!

ஒருவர், வங்கியில் புதிதாக விண்ணப்பித்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்கும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன.ஏற்கனவே பயன்படுத்தும் ஏடிஎம் அட்டை காலாவதியாக... மேலும் பார்க்க

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை! ஏடிஎம் பின் மட்டுமல்ல சிவிவி எண் முக்கியம்!!

ஆன்லைன் பணப்பரிவத்தனை மோசடிகளில் இருந்து தப்பிக்க ஏடிஎம் அட்டையின் பின் எண் மட்டும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது தவறு. ஏடிஎம் அட்டையின் சிவிவி எண்ணும் முக்கிய... மேலும் பார்க்க

தனிநபரைக் குறிவைக்கும் ஃபிஷிங் தாக்குதல்: எப்படித் தற்காத்துக்கொள்வது?

நவீனத் தொழில்நுட்பம் ஒருபக்கம் வளர்ச்சியடைந்தாலும், மறுபக்கம் அதன் மூலம் மக்களின் சேமிப்புப் பணத்தை சுரண்டுவதற்கான எதிர்வினைகளும் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் சைபர் மோசடியாளர்கள் நாளுக்குநாள் பர... மேலும் பார்க்க