திருவண்ணாமலையை உலுக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 2 காவலர்களும் ...
குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு
டேஹ்ராடூன்: குளிர்காலத்தை முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 25ம் தேதி மூடப்படும் என்று ஜோதிட நிபுணர்கள் கணித்து தேதியை அறிவித்துள்ளனர்.
சார்தாம் என்று அழைக்கப்படும் நான்கு புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், கடல் மட்டத்திலிருந்து 10,170 அடி உயரத்திலும் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோயில், ஆண்டுதோறும் குளிர்காலத்தில் மூடப்படுவது வழக்கம்.
குளிர் காலத்தில் ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக இந்த கோயில் முழுவதும் பனியால் மூடப்படும் என்பதால், இந்த வழக்கம் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கோயில் நடை மூடப்படும் என்றாலும், சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் நடை எந்த தேதியில், எத்தனை மணிக்கு மூடப்பட வேண்டும் என்பதை இன்று விஜயதசமி நாளில் நிபுணத்துவம் பெற்ற ஜோதிடர்கள் அமர்ந்து நேரத்தைக் கணித்து வழங்கியருக்கிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி, வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி பிற்பகல் 2.56 மணியளவில், சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்பட்ட பிறகு, கோயில் நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.