செய்திகள் :

மொராக்கோவில் வெடித்த ஜென் ஸி போராட்டம்! அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

post image

மொராக்கோவில், அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்கள் நிதிபற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வரும் 2030 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது, மொராக்கோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பல கோடி டாலர்கள் செலவில் முக்கிய முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனால், அரசு நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழலை எதிர்த்து, மொராக்கோவின் முக்கிய நகரங்களில் ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் கடந்த 5 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, லெகிலா நகரத்தில் நேற்று (அக். 1) நடைபெற்ற போராட்டத்தில், மொராக்கோ காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட இருவரும் போலீஸாரின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிக்க முயன்றதாகவும்; அதனால், தற்காப்பிற்காக மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இருப்பினும், தலைவர்கள் யாருமின்றி இணையதளம் வாயிலாக பரவிய செய்திகளின் மூலம் ஒன்று திரண்டு வீதிகளில் இறங்கி போராடி வரும் இளம்தலைமுறையினரை, போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருவதால் பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது.

மேலும், சேல் நகரத்தில் முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் அங்குள்ள வாகனங்கள் மீது தீவைப்பது மற்றும் வங்கிகள், கடைகளை உடைத்து சேதப்படுத்துவது போன்ற விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம், நேபாள நாட்டில் சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து ஜென் - ஸி தலைமுறையினர் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம், அப்போதைய பிரதமர் சர்மா ஓலி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்! என்னென்ன துறைகள் இயங்கும்?

In Morocco, two people were killed in police shootings during nationwide protests by young people against the government.

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்! என்னென்ன துறைகள் இயங்கும்?

அமெரிக்க நாடாளுமன்றத்தில், அரசு நிர்வாக செலவீனங்களுக்கு ஒதுக்கும் நிதி தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாததால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது.அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களைத் த... மேலும் பார்க்க

எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை எனில் அது அமெரிக்காவுக்கே அவமானம்! - டிரம்ப்

உலகில் 8 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது அமெரிக்காவையே அவமதிப்பதாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் உள்பட உலகில் பல்வேறு போர்களை நிறுத்... மேலும் பார்க்க

கத்தாரை தாக்கினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்! டிரம்ப்

கத்தாரை பிற நாடுகள் தாக்கினால், அது அமெரிக்கா மீதான தாக்குதலாக கருதப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் வான்வழித... மேலும் பார்க்க

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

அமெரிக்காவின் விவசாயிகள் நலன்கருதி, சீனாவை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனா மீதான வரிவிதிப்பால், அமெரிக்காவில் சோயா பீன்ஸை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. இ... மேலும் பார்க்க

62 வயது டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸும், நடிகை அனா டி அர்மாஸுக்கும் விண்வெளியில் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் டாம் க்ரூஸ் (63) மற்றும் நடிகை அனா ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர்.பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி கூட்டு... மேலும் பார்க்க