செய்திகள் :

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்! என்னென்ன துறைகள் இயங்கும்?

post image

அமெரிக்க நாடாளுமன்றத்தில், அரசு நிர்வாக செலவீனங்களுக்கு ஒதுக்கும் நிதி தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாததால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது.

அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களைத் தவிர, மற்றத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் அரசு நிர்வாக செலவீனங்கள் தொடர்பான மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இந்த மசோதா மூலமாகத்தான், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதிக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த நிலையில், அமெரிக்காவின் மேலவையான செனட் அமைவயில், செலவீனங்களுக்கான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. மசோதாவுக்கு ஆதரவாக 55 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆனால், இந்த முக்கிய மசோதா நிறைவேற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 60 சதவீத வாக்குகள் கிடைக்க வேண்டும்.

ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருப்பதால், கடந்த 24 மணி நேரமாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது.

இதன்படி, அமெரிக்க அஞ்சல் துறை, மருத்துவத் துறை, சமூகப் பாதுகாப்பு பண வழங்கல், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, வங்கிகள், நீதிமன்றங்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, ஃபெடரல் சட்ட அமலாக்கத் துறை, ராணுவத் துறையினர் மட்டும் பணியாற்றுவார்கள்.

ஆனால், ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், விமானக் கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசியப் பணியாளர்களாக கருதப்பட்டு பணியாற்றுவார்களே தவிர, செலவீன மசோதா நிறைவேறும் வரை இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தெரிகிறது.

அதேவேளையில், தேசிய பூங்காக்கள், பார்வையாளர் மையங்கள், சுற்றுலா தொடர்பான அரசுக் கட்டங்கள், அரசு அருங்காட்சியகங்கள், அரசு நூலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு, அமெரிக்க அரசு முடங்கியிருப்பதால், நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் ஏற்படும் என்றும், 7,50,000 அமெரிக்க அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

The US government is in a state of shutdown due to the failure of the US Congress to pass a bill to allocate funds for government administrative expenses.

எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை எனில் அது அமெரிக்காவுக்கே அவமானம்! - டிரம்ப்

உலகில் 8 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது அமெரிக்காவையே அவமதிப்பதாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் உள்பட உலகில் பல்வேறு போர்களை நிறுத்... மேலும் பார்க்க

கத்தாரை தாக்கினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்! டிரம்ப்

கத்தாரை பிற நாடுகள் தாக்கினால், அது அமெரிக்கா மீதான தாக்குதலாக கருதப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் வான்வழித... மேலும் பார்க்க

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

அமெரிக்காவின் விவசாயிகள் நலன்கருதி, சீனாவை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனா மீதான வரிவிதிப்பால், அமெரிக்காவில் சோயா பீன்ஸை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. இ... மேலும் பார்க்க

62 வயது டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸும், நடிகை அனா டி அர்மாஸுக்கும் விண்வெளியில் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் டாம் க்ரூஸ் (63) மற்றும் நடிகை அனா ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர்.பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி கூட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாஸ்பேட் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவாவின், அபோடாபாத் மாவட்டத்தில், பாஸ்பேட் சுரங்கம் ஒன்று இயங்கி வந்... மேலும் பார்க்க