செய்திகள் :

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

post image

சென்னை: பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லக்கூடிய தவெக தலைவர் விஜய், எப்படி பாஜக பிடியில் இருப்பார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், மணிப்பூர் மற்றும் கும்பமேளா போன்ற இடங்களுக்கு பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் செல்லவில்லை? என செந்தில் பாலாஜி பேசியது குறித்த கேள்விக்கு கும்பமேளா சம்பவம் எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். கும்பமேளாவிற்கு 64 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வந்தார்கள்.

கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள், சிறிய குழந்தைகள் முதல், பெண்கள் என இறந்து உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் கேட்ட இடத்தில் ஏன் அனுமதி கொடுக்கவில்லை? போலீஸ் தடியடி செய்வதற்கு அவசியம் என்ன? மின்சாரத்தைத் துண்டித்தது யார்? செருப்பை யார் தூக்கி அடித்தது? முதலமைச்சர் வரும்போது மட்டும் ஏன் ரவுண்டானா போன்ற பெரிய இடங்களில் அனுமதி கொடுக்கிறார்கள்? இதையெல்லாம் அவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

தனிநபர் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும் போது, அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது நிச்சயமாக தவறு. நானாக ஒன்றும் சொல்லவில்லை நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்.

பாஜக எங்களுடைய எதிரி என்று விஜய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் எப்படி விஜய் பாஜக கைப்பிடியில் இருக்கிறார் என்று சொல்ல முடியும்? கரூர் விவகாரத்தில் பாஜக உண்மை கண்டறியும் குழு என்ன எழுதி கொடுத்து இருக்கிறார்கள் என தெரிந்தபின்னரே தெரியும் என்றார் நயினார் நாகேந்திரன்.

திருவண்ணாமலையில் இரண்டு காவலர்கள் ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்த கேள்விக்கு, இது இன்று நேற்று நடந்த செயல் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து வேலியே பயிரை மேய்வது போல் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று கொண்டுதான் உள்ளது என்றார்.

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

தவெக விஜய்க்கும், திமுகவுக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் வலுப்பெற்றிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி... மேலும் பார்க்க

கரூர் பலி: முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? - ராமதாஸ்

கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எப்படி காரணமாக இருக்க முடியும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ் கரூர் நெரிசல் பலி குறித்த கேள்விகளுக்கு பதிலளி... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்குப்பதிய அரசுக்கு அச்சமா? திருமாவளவன்

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறதா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், விஜய்யை பாஜக இயக்குவதாகவும் அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அவர்... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு! எங்கே? எப்படி?

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேர்மை விழிப்புணர்வு நாளைக் கொண்டாடும் வகையில், 26வது ஆண்டாக பாபநாசத்தில் இன்று ஒரு நாள் ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேர்மை விழிப்புணர்வு நா... மேலும் பார்க்க