செய்திகள் :

கரூர் பலி: முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? - ராமதாஸ்

post image

கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எப்படி காரணமாக இருக்க முடியும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தைலாபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ் கரூர் நெரிசல் பலி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

விஜய்யின் விடியோ குறித்து, "கரூர் சம்பவத்திற்கு முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்" என்றார்.

மேலும், "இன்றிற்க்கு பொதுவாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பார்ப்பதற்கே மக்கள் பயப்படுகிறார்கள்.

கரூரில் நடந்தது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் இனி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு உயிர்கூட பாதிப்பு ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காவல்துறையும் அதற்கு வழிகாட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்தார்.

கரூர் நெரிசல் பலி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் போதிய திட்டமிடல், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தவெக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கரூர் மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜும் கைதாகியுள்ளனர்.

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இரு நாள்களுக்குப் பிறகு இதுகுறித்து விடியோ வெளியிட்ட விஜய், முதல்வர் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

PMK Ramadoss comments on the Karur stampede and vijay's video

எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை எனில் அது அமெரிக்காவுக்கே அவமானம்! - டிரம்ப்

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

சென்னை: பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லக்கூடிய தவெக தலைவர் விஜய், எப்படி பாஜக பிடியில் இருப்பார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின்... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்குப்பதிய அரசுக்கு அச்சமா? திருமாவளவன்

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறதா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், விஜய்யை பாஜக இயக்குவதாகவும் அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அவர்... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு! எங்கே? எப்படி?

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேர்மை விழிப்புணர்வு நாளைக் கொண்டாடும் வகையில், 26வது ஆண்டாக பாபநாசத்தில் இன்று ஒரு நாள் ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேர்மை விழிப்புணர்வு நா... மேலும் பார்க்க

காந்தி பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று(அக... மேலும் பார்க்க

பாமக இளைஞரணி தலைவராக தமிழ்குமரன் நியமனம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம். தமிழ்குமரனை நியமித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.பாமகவில் ஏற்பட்ட பிளவால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தனித்தனியாக அவர்களின்... மேலும் பார்க்க