செய்திகள் :

செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு!

post image

கோவை: கோவையில் உள்ள செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை, ராஜவீதியில் அமைந்துள்ளது ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளையொட்டி தேவாங்க சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ராமலிங்க செளடேஸ்வரி அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் இருந்து செளடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பக்தா்கள் ஊா்வலமாக வந்தனா்.

அப்போது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று கூறியவாறு உடலில் கத்தியால் அடித்துக் கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த நோ்த்திடக்கடன் செய்வதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் ஐதீகம்.

பக்தர்களின் உடலில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்தப் திருமஞ்சன பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தொடா்ந்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Knife throwing festival at Chowdeshwari Amman temple in covai

குணசீலத்தில் தேரோட்டம்!

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் தந்தை ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்வர் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திரா... மேலும் பார்க்க

துப்பாக்கிகள் வைத்து ஆயுத, சரஸ்வதி பூஜை கொண்டாடிய புதுச்சேரி போலீசார்

புதுச்சேரி காவல்துறை ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் சார்பில் துப்பாக்கிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஆயுத, சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் ஆயுத பூஜை விழா பல்வ... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் காந்தி ஜெயந்தி விழா!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவொற்றியூர் நல சங்கம் சார்பில் அங்குள்ள காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி, திருவொற்றியூர... மேலும் பார்க்க

குணசீலத்தில் தேரோட்டம்!

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், குணசீலத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என... மேலும் பார்க்க

நமது கருத்து மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது: மோகன் பாகவத்

நமது கருத்துகள் மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் மோகன் பாகவத் பேசுகையில், சில வெள... மேலும் பார்க்க