செய்திகள் :

நமது கருத்து மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது: மோகன் பாகவத்

post image

நமது கருத்துகள் மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் மோகன் பாகவத் பேசுகையில்,

சில வெளிநாட்டு சித்தாந்தங்கள் இந்தியாவிற்கு வந்த போதெல்லாம், அவற்றை நாம் நம்முடையதாகவே கருதினோம்.

உலகில் உள்ள பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்கிறோம்... ஆனால் நம் நாட்டில், இந்த பன்முகத்தன்மையை சிதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நமது கருத்துகள் மற்ற மதத்தினரையோ, அவர்களின் நம்பிக்கையையோ அவமதிக்கவோ அல்லது இழிவுபடுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது என்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.

பலதரப்பட்ட நம்பிக்கைகளைக் கொண்ட பலர் ஒரு சமூகத்தில் இணைந்து வாழும்போது, ​​அவ்வப்போது சில சத்தங்களும் குழப்பங்களும் ஏற்படலாம். இருப்பினும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் நல்லிணக்கம் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அவரவர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதும், தெருக்களில் இறங்கி வன்முறை மற்றும் குண்டர் செயலில் ஈடுபடுவது சரியல்ல.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தூண்டி, ஒருவரின் பலத்தைக் காட்டும் செயல் என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்று கூறினார்.

Everyone should ensure that our words do not insult or demean any faith or belief...

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு!

கோவை: கோவையில் உள்ள செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை, ராஜவீதியில் அமைந்துள்ளது ராமலிங்க செளடேஸ்வரி அம்மன... மேலும் பார்க்க

துப்பாக்கிகள் வைத்து ஆயுத, சரஸ்வதி பூஜை கொண்டாடிய புதுச்சேரி போலீசார்

புதுச்சேரி காவல்துறை ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் சார்பில் துப்பாக்கிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஆயுத, சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் ஆயுத பூஜை விழா பல்வ... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் காந்தி ஜெயந்தி விழா!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவொற்றியூர் நல சங்கம் சார்பில் அங்குள்ள காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி, திருவொற்றியூர... மேலும் பார்க்க

குணசீலத்தில் தேரோட்டம்!

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், குணசீலத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என... மேலும் பார்க்க

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் மள மளவென சரியத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, க... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116.29 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,358 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,312 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன... மேலும் பார்க்க