செய்திகள் :

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

post image

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் மள மளவென சரியத் தொடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

கர்நாடக அணைகளில் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் 6 ஆவது முறையாக செப்டம்பர் 2 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.

தற்போது காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பாசன தேவை அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த 24 ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 9,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. படிப்படியாக அதிகரிக்கப்பட்ட நீர் திறப்பு புதன்கிழமை வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் வரத்து வினாடிக்கு 5,312 கனஅடியாக சரிந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மள மளவென சரிந்து வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் கடந்த 26 ஆம் தேதி நிரம்பிய நிலையில் 119.02 அடியாக இருந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116. 29 அடியாகச் சரிந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் அணையின் நீர்மட்டம் 2.73 அடி சரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116.29 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5312 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 87.67 டிஎம்சியாக உள்ளது.

Mettur Dam water level has started to reducede!

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா?

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்வர் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திரா... மேலும் பார்க்க

செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு!

கோவை: கோவையில் உள்ள செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை, ராஜவீதியில் அமைந்துள்ளது ராமலிங்க செளடேஸ்வரி அம்மன... மேலும் பார்க்க

துப்பாக்கிகள் வைத்து ஆயுத, சரஸ்வதி பூஜை கொண்டாடிய புதுச்சேரி போலீசார்

புதுச்சேரி காவல்துறை ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் சார்பில் துப்பாக்கிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஆயுத, சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் ஆயுத பூஜை விழா பல்வ... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் காந்தி ஜெயந்தி விழா!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவொற்றியூர் நல சங்கம் சார்பில் அங்குள்ள காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி, திருவொற்றியூர... மேலும் பார்க்க

குணசீலத்தில் தேரோட்டம்!

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், குணசீலத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என... மேலும் பார்க்க

நமது கருத்து மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது: மோகன் பாகவத்

நமது கருத்துகள் மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் மோகன் பாகவத் பேசுகையில், சில வெள... மேலும் பார்க்க