செய்திகள் :

`பெரிய மன உளைச்சல்ல இருக்கேன்; திட்டறவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல!' - பிக்பாஸ் அசீம்

post image

கரூர் விவகாரம் குறித்து நடிகரும் பிக்பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னருமான அசீம் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில்

‘’வயதானவங்களும், கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் வந்து நெரிசல்ல சிக்கி உயிரை விட்டிருக்காங்க. அந்தத் துயரம் குறித்து வருத்தத்தைத் தெரிவிக்கக் கூட விஜய் சார்க்கு நாலு நாள் ஆகுது. இந்த தாமதமே ரொம்ப தப்பு.

கரூர் துயரம்
கரூர் துயரம்

ஒரு பிரச்னைனு வந்ததும் ஓடி ஒளிஞ்சிகிட்டு அது பத்திப் பேசவே நாள் கணக்குல அவகாசம் எடுத்துக்கிற நீங்க கனவு காண்கிற படி ஒரு வேளை முதல்வர் ஆகிட்டா எந்தவொரு விஷயத்தையும் எப்படி ஹேண்டில் செய்வீங்க? உங்களுடைய இந்த மாதிரியான நடவடிக்கை திரையில் மட்டுந்தான் நீங்க ஹீரோவானு கேக்க வைக்குது.

அதேபோல் ரஜினி, கமல் சாரைத் தாண்டி இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிச்சோ அல்லது கண்டனம் தெரிவிச்சோ இன்னைகு உச்ச நட்சத்திரங்களா இருக்கிற ஒருத்தர் கூட வீடியோவோ ட்வீட்டோ போடலை அது ஏன்னு புரியலை.

'பிக் பாஸ்' அசீம் சீமானுடன்

தங்களுடைய படங்கள் ரிலீசாகுறப்ப தங்களுடைய ரசிகர்களைத் தாண்டி விஜய் ரசிகர்களும் படத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறாங்க போல. அந்தப் பயத்துலதான் யாரும் கருத்து சொல்லலைனு நான் நினைக்கிறேன். இதுவும் ரொம்பவே ஜீரணிக்க முடியலைங்க. நானுமே இப்ப படம் நடிச்சிட்டிருக்கேன். நாளைக்கு என் படமும் ரிலீசாகும். என்ன ஆனாலும் ஆகிட்டுப் போகட்டும். ஆனா நடந்த சம்பவம் எனக்கு பெரிய மன உளைச்சலைத் தந்தது. அதனாலேயே இப்படியொரு வீடியோ போடணும்னு நினைச்சேன்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

வழக்கம் போல கமெண்ட்ல வந்து திட்டறவங்க திட்டத்தான் போறாங்க. அவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல. போற்றுவார் போற்றட்டும்னு நினைச்சுட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்’ என ரொம்பவே கொதிப்புடன் பேசியிருக்கிறார்.

அசீம் ஆரம்பத்தில் திமுக ஆதரவாளரெனச் சொல்லப்பட்டது. பிறகு சீமானுடன் நெருக்கம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது அரசியல் களத்தில் கனன்று கொண்டிருக்கும் கரூர் விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: 'கூல்' மோடில் ட்ரம்ப்; இந்தியாவிற்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல்- முழு அலசல்

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்... மேலும் பார்க்க

கரூர் துயரம்: "பிணங்களின் மீது சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்" - செல்வப்பெருந்தகை வேதனை!

நாடாளுமன்ற தேர்தல் வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

'விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா?' - திருமாவளவன் கேள்வி

கடந்த சனிக்கிழமை, கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட எம்.பி குழு ஒ... மேலும் பார்க்க

'ஜி.கே மணியின் மகனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவி!' - ராமதாஸ் அறிவிப்பு

பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அணி. மற்றொன்று பாமக தலைவர் அன்புமணி அணி. சமீபத்தில் அன்புமணியை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.... மேலும் பார்க்க

RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் - மோகன் பகவத் கருத்து

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.அமெரிக்காவின் 50 சதவிகித வரி அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித... மேலும் பார்க்க

`கேஸை முடிக்க உதவுங்கள்' உதவி கோரும் மன்னர் புள்ளி டு `புதியவர் சரிப்பட்டு வருவாரா?' | கழுகார்

உதவி கோரும் மன்னர் புள்ளி!“கேஸை முடிக்க உதவுங்கள்...”தமிழகத்தைச் சேர்ந்த இனிஷியல் புள்ளி, நாட்டிலே உயரிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். அவர் அந்தப் பொறுப்புக்குச் சென்றதால், காலியான அவரின் பழைய இடத்துக்... மேலும் பார்க்க