செய்திகள் :

'விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா?' - திருமாவளவன் கேள்வி

post image

கடந்த சனிக்கிழமை, கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட எம்.பி குழு ஒன்றை அமைத்தார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா.

இந்தக் குழு கரூரில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) ஆய்வை மேற்கொண்டது.

திருமாவளவன்
திருமாவளவன்
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

அவர், "கூட்டணிக்கு வேண்டாம். வெளியில் இருந்தே திமுகவிற்கு எதிரான தீவிர வெறுப்பைப் பரப்புங்கள். இது தான் பாஜக பலருக்கு கொடுத்திருக்கும் செயல்திட்டம்.

அனைவரையுமே கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை. இந்தத் தேர்தலில் விஜயைக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கமும் இல்லை... பாஜக நோக்கமும் இல்லை.

அதிமுக - பாஜக முயற்சிக்காது

'அவரை வைத்து திமுக தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வராமல் தடுத்துவிட வேண்டும். சிறுபான்மை சமூதாயத்தினரின் பெரும்பான்மையான வாக்குகளை சிதறடிக்க வேண்டும்' - இது தான் அவர்களின் ஒரே செயல்திட்டம். அதனால், தவெகவை அதிமுக - பாஜக கூட்டணயில் சேர்க்க ஒருபோதும் முயற்சிக்கமாட்டார்கள்.

அவர்கள் திமுக, திமுக அரசு, திமுக கூட்டணி மீதான தாக்குதல்களுக்கு துணையாக நிற்பார்கள்.

மணிப்பூருக்கு செல்லவில்லை

மணிப்பூரில் நாள்தோறும் உயிரிழப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அது குறித்து பிரதமர் கவலைப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் பேசவில்லை. அது குறித்து பேசவும் அனுமதிக்கவில்லை. எந்த நாடாளுமன்ற குழுவையும் அங்கே அனுப்பவில்லை.

ஆனால், இந்தப் பிரச்னையில் மட்டும் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், ஹேமமாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஓடோடி வருகிறது.

காவல்துறை, தமிழ்நாடு அரசு முறையாக இயங்கவில்லை என்று குற்றம் சாட்ட முயலுகிறது. ஆனால், அவர்களுக்கு 41 பேர் இறந்தது பிரச்னையாக இல்லை.

இதை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கமாக இருக்கிறது.

எம்.பி குழு
எம்.பி குழு

விஜய்யின் ஆபத்தான அரசியல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதை விட, இதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று தான் விஜய்யும் குறியாக இருக்கிறார். இதை பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்காக அவர் துளியும் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்வு இல்லை.

இதில் அவர் ஆட்சியாளர்கள் மீது பழி போட முயற்சிக்கிறார் என்றால், அவர் எவ்வளவு ஆபத்தான அரசியலைக் கையிலெடுத்து இருக்கிறார்? அல்லது எவ்வளவு ஆபத்தானவர்களின் கையில் சிக்கி இருக்கிறார் என்பது பெரும் கவலையளிக்கிறது.

இது மாதிரியான சக்திகளிடம் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால், தமிழ்நாடு எதிர்காலம் என்ன ஆகும் என்று அச்சம் எழுகிறது.

விஜய் மீது ஏன் வழக்கு பதியவில்லை?

இந்தச் சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டுகிற மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏன் விஜய் மீது வழக்கு பதியவில்லை.

புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிய இருக்கும் முகாந்திரம், விஜய் மீது இல்லையா?

புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கிறவர்கள் மீது வழக்கு தொடுக்கும்போது, அருண் ராஜ் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை? ஏன் ஆதவ் அர்ஜூனா மீது வழக்கு பதியவில்லை.

விஜய் - கரூர் பரப்புரை
விஜய் - கரூர் பரப்புரை

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை அச்சப்படுகிறதா? வலுத்தவர்கள் மீது வழக்கு போடுவதில்லை... இளைத்தவர்கள் மீது வழக்கு போடுவது என்கிற நடைமுறையை கையாளுகிறதா?

'பாஜக கொள்கை எதிரி' என்று விஜய் சொல்லும்போது, ஏன் பாஜக வந்து விஜய்க்கு முட்டுக்கொடுக்கிறது. இது அவர்களது திட்டம் தான்.

கடந்த 25 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில், எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். விசிக இருக்கும் வரை, இந்த சூதும், சூழ்ச்சியும் நடக்காது." என்றார்.

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: 'கூல்' மோடில் ட்ரம்ப்; இந்தியாவிற்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல்- முழு அலசல்

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்... மேலும் பார்க்க

கரூர் துயரம்: "பிணங்களின் மீது சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்" - செல்வப்பெருந்தகை வேதனை!

நாடாளுமன்ற தேர்தல் வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

`பெரிய மன உளைச்சல்ல இருக்கேன்; திட்டறவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல!' - பிக்பாஸ் அசீம்

கரூர் விவகாரம் குறித்து நடிகரும் பிக்பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னருமான அசீம் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில்‘’வயதானவங்களும், கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் வந்... மேலும் பார்க்க

'ஜி.கே மணியின் மகனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவி!' - ராமதாஸ் அறிவிப்பு

பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அணி. மற்றொன்று பாமக தலைவர் அன்புமணி அணி. சமீபத்தில் அன்புமணியை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.... மேலும் பார்க்க

RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் - மோகன் பகவத் கருத்து

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.அமெரிக்காவின் 50 சதவிகித வரி அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித... மேலும் பார்க்க

`கேஸை முடிக்க உதவுங்கள்' உதவி கோரும் மன்னர் புள்ளி டு `புதியவர் சரிப்பட்டு வருவாரா?' | கழுகார்

உதவி கோரும் மன்னர் புள்ளி!“கேஸை முடிக்க உதவுங்கள்...”தமிழகத்தைச் சேர்ந்த இனிஷியல் புள்ளி, நாட்டிலே உயரிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். அவர் அந்தப் பொறுப்புக்குச் சென்றதால், காலியான அவரின் பழைய இடத்துக்... மேலும் பார்க்க