செய்திகள் :

Parthiban: ``அதனால் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் எனச் சொல்வார்கள்" - நடிகர் பார்த்திபன்

post image

கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

TVK Vijay Karur Stampede
TVK Vijay Karur Stampede

இன்று `மெளனம்' படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் கரூர் சம்பவம் குறித்தும், நேற்று வெளியான இட்லி கடை' திரைப்படம் குறித்தும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தும் பேசியிருக்கிறார்.

பார்த்திபன் பேசுகையில், "41 மரணங்கள் நிகழும்போதும் மெளனத்தைக் கடைபிடிக்கும் மோசமான சூழலில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. இதில் எது சரி, தவறு என ஆராய்வதற்கு வேறு ஒரு குழு இருக்கிறது.

மேலும், இதுபோன்ற பலி ஏற்படாமல் இருப்பதற்கு அலட்சியம், அஜாக்கிரதை, சதி, சூழ்ச்சி என எதுவாக இருந்தாலும் அந்தப் பிரச்னைக்குள் போகாமல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மேலும் பாதிப்புகள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாது.

நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன்

காந்தி ஜெயந்தியான இன்று காந்தியை வேண்டிக் கொள்வோம். நேற்று வெளியான `இட்லி கடை' படத்தில் நான் நடித்திருப்பது பெருமை.

`இட்லி கடை' அகிம்சையைப் பற்றி பேசுகிற ஒரு திரைப்படம். இன்றைய நாட்களில் வன்முறையை வைத்து படமெடுத்தால் அது பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும். அப்படியான காலத்தில் அகிம்சையை நம்பி படம் எடுத்திருக்கும் தனுஷுக்கு பாராட்டுகள்.

மகாத்மா காந்தியே, இன்றைய நாளில் படமெடுக்க வந்தால் வன்முறையை வைத்துதான் படமெடுப்பார். இப்படியான காலத்தில் ஒரு நல்ல படமெடுக்க வந்திருக்கும் இந்த `மெளனம்' படக்குழுவுக்கு என்னுடைய பாராட்டுகள்.

சினிமாவிலிருக்கும் அனைவருக்கும் சமூகப் பொறுப்புணர்வு முக்கியம். அரசியலுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. மனதில் வீராப்பு, நல் எண்ணம் கொண்டவர்கள் மட்டும் இங்கு அரசியல் செய்துவிட முடியாது. அரசியல் என்பது வேறு களம், அது யாரும் புரியாது என்றே புதைத்து வைத்திருந்தார்கள்.

Parthiban
Parthiban

அப்படியான நேரத்தில்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வீரியமாக அரசியலுக்கு வந்தார். யார் அரசியலுக்குள் வந்தாலும் நான் அவர்களை வரவேற்கிறேன். நல்லது தானே!

இதனால் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் எனச் சொல்வார்கள். அப்படி எதுவும் கிடையாது. இங்கு போட்டி பயங்கரமாக இருந்தால்தான் வெற்றி நியாயமாக இருக்கும் என்பது என் கருத்து." எனப் பேசியிருக்கிறார்.

Kantara: ``விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன!" - காந்தாரா குறித்து நெகிழும் ஜெயராம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதற்கு முந்தைய பாகத்தின் ப்ரீக்வல் கதையைச் சொல்கிறது இந்த சாப்டர். இப்... மேலும் பார்க்க

'விவசாயிகள் சந்திக்கும் புதிய scam! உண்மை சம்பவத்தை பேசும் 'Marutham' | Cinema Vikatan Interview

Aruvar pvt. ltd சார்பில் C. வெங்கடேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வி. கஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் விதார்த் - ரக்ஷனா நடிப்பில் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் 'மருதம்'. சமூக அக்கறை ... மேலும் பார்க்க

இட்லி கடை: "அஹிம்சை வெல்லும் என இன்று காந்திகூட ஒரு படம் எடுக்கத் தயங்குவார்; காரணம்" - பார்த்திபன்

டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் 'இட்லி கடை'. இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த... மேலும் பார்க்க