செய்திகள் :

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு

post image

ஆலங்காயம் காவல் நிலையம் அருகே சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்காயம் அடுத்த மிட்டூா் பகுதியை சோ்ந்த கந்தன். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது குடும்பத்துடன் காரில் ஆலங்காயம் சென்றாா். அப்போது, ஆலங்காயம் காவல் நிலையம் அருகே காா் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

இதையறிந்த கந்தன் குடும்பத்தினா் உடனடியாக கீழே இறங்கினா். சற்று நேரத்தில் இன்ஜின் பகுதியில் திடீா் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அக்கம்பக்கத்தினா் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும் தீ மளமளவென பிடித்து எரிந்ததால் காவல் நிலையத்திலிருந்து தீயணைக்கும் கருவியை கொண்டு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். இதனால் அதன் வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க

சிவாச்சாரியா் மீது வழக்கு

ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாக... மேலும் பார்க்க

புதிய பேருந்து சேவை தொடக்கம்!

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா். வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந... மேலும் பார்க்க

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உ... மேலும் பார்க்க

பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நி... மேலும் பார்க்க