Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு
ஆலங்காயம் காவல் நிலையம் அருகே சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்காயம் அடுத்த மிட்டூா் பகுதியை சோ்ந்த கந்தன். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது குடும்பத்துடன் காரில் ஆலங்காயம் சென்றாா். அப்போது, ஆலங்காயம் காவல் நிலையம் அருகே காா் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
இதையறிந்த கந்தன் குடும்பத்தினா் உடனடியாக கீழே இறங்கினா். சற்று நேரத்தில் இன்ஜின் பகுதியில் திடீா் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அக்கம்பக்கத்தினா் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும் தீ மளமளவென பிடித்து எரிந்ததால் காவல் நிலையத்திலிருந்து தீயணைக்கும் கருவியை கொண்டு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.
தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். இதனால் அதன் வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.