செய்திகள் :

"சினிமா கனவுடன் மெட்ராஸ் போனேன்; ஆனால்" - மோகன் லால் சொன்ன நெகிழ்ச்சிக் கதை!

post image

இந்த ஆண்டு 71-வது தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் மோகன் லால் தாதா சாகேப் விருதைப் பெற்றார்.

இதைக் கொண்டாடும் விதமாக கேரள அரசு, திருவனந்தபுரத்தில் மாபெரும் பாராட்டு விழா ஒன்றை நடத்தியிருக்கிறது. அந்த விழாவில் பேசிய மோகன் லால், "நான் விருது பெற்ற தருணத்தை விடவும், என் சொந்த ஊர், நான் பிறந்து வளர்ந்த மண்ணில் இப்போது நின்று இந்தப் பாராட்டுகளையும், அன்பையும் பெறுவது உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. இந்த மண்ணின் காற்று, அதன் கட்டடங்கள், அதன் நினைவுகள் என் ஆன்மாவில் கலந்திருக்கிறது.

மோகன் லால்
மோகன் லால்

48 ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாத காலத்தில், நானும் என் நண்பர்கள் சிலரும் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று கனவு கண்டோம். நான் சினிமா கனவுடன் தைரியமாக மெட்ராஸுக்குப் போனேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் நண்பர்கள் என்னுடைய போட்டோவை இயக்குநர் பாசில் சாருக்கு அனுப்பிவிட்டார்கள். அப்படித்தான் 'manjil virinja poovu' மூலம் அறிமுகமானேன். இப்போது 'Drishyam 3' படப்பிடிப்பில் கேமரா முன்னாடி நிற்கும்போது அந்த நினைவுகள் எல்லாம் வந்து போனது.

நான் மரத்தில் இருந்து விழுந்த சிறிய இலை. காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்த என்னை திறமைமிக்க இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனை கலைஞர்கள் மற்றும் மலையாளிகள் வழிகாட்டி சரியான இடத்தை நோக்கிப் பயணப்பட வைத்தனர். அந்தப் பயணம்தான் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மோகன் லால்
மோகன் லால்

எப்போதெல்லாம் என்மீது எனக்கே சந்தேகம் வந்து, தடுமாறுகிறேனோ அப்போதெல்லாம் 'லாலெட்டா' என்ற உங்களின் அன்பு குரல்கள்தான் என்னை ஊக்கப்படுத்தி முன்னே கூட்டிச் செல்கின்றன.

ஒரு நடிகன் என்பவன் இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களால் வடிவமைக்கப்படும் களிமண்ணைப் போன்றவன். என் வாழ்வில் நான் வெற்றியையும், கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டிருக்கிறேன். நான் இரண்டையும் சமமாகவே பார்க்கக் கற்றுக் கொண்டவன்.

மோகன் லால்
மோகன் லால்

ரசிகர்கள் இல்லாமல் எதையும் சாதித்திருக்க முடியாது. இந்த அங்கீகாரம் முழுக்க முழுக்க அவர்களுக்கே சொந்தம். நான் சரியும் போதெல்லாம் யாராவது ஒருவர் என்னைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். என் குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் ஆதரவையும் இந்தத் தருணத்தில் நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன். ஒவ்வொரு மலையாளியின் பெருமையாக நான் இங்கே நிற்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் மோகன் லால்

Manju Warrier: ``உச்சத்தில சூரியனா நின்ன தேவத நீ" - மஞ்சுவாரியார் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album

நடிகை மஞ்சுவாரியார் Preethi Asrani: ``அலாரம் உந்தன் love ஆகி போச்சே'' - ப்ரீத்தி அஸ்ராணி | Photo Album மேலும் பார்க்க

Mammootty: 'கேமரா என்னை அழைக்கிறது'- மீண்டும் படப்பிடிக்குத் திரும்பும் மம்மூட்டி நெகிழ்ச்சி

கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு உடல் நலமில்லை என்றச் செய்திகள் வெளியானது.அதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் கலந்துக... மேலும் பார்க்க

Lokah Chapter 2: "அடுத்து டொவினோ கதை; 389 சகோதரர்களும், சாத்தன் கூட்டமும்"- வெளியான அப்டேட்

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' திரைப்படம்.இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நட... மேலும் பார்க்க

Balti Review: பாட்டு இருக்கு, டான்ஸ் இருக்கு, ஆக்ஷன் இருக்கு; ஆனா, கதை எங்க இருக்கு சேட்டன்ஸ்?!

கோவை - கேரளாவின் எல்லைப் பகுதியில் உதயன் (ஷேன் நிகம்), குமார் (ஷாந்தனு) மற்றும் அவர்களுடைய நண்பர்கள் வசிக்கிறார்கள். அங்குச் சொந்தமாக ஒரு இறைச்சிக்கடையை உதயன் நடத்தி வருகிறார். வேலையைத் தாண்டி அவ்வப்ப... மேலும் பார்க்க

'என் அன்பு நண்பர் லாலேட்டனைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்'- மோகன் லாலை வாழ்த்திய கமல்ஹாசன்

'தாதா சாகேப் பால்கே' விருது பெற்ற மலையாள நடிகர் மோகன் லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 1978 ஆம் ஆண்டு 'திறநோட்டம்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் மோகன் லால் மலையாளத் தி... மேலும் பார்க்க

"குடியரசுத் தலைவருக்குப் பிடித்த என்னுடைய இரண்டு திரைப்படங்கள்"-நடிகர் மோகன் லால் நெகிழ்ச்சி

71-வது தேசிய விருது வழங்கும் விழா நேற்று (செப் 24) டெல்லியில் நடைபெற்றது.தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக்கான், ஜி.வி. பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட... மேலும் பார்க்க