செய்திகள் :

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: பிப்.17-இல் தொடக்கம்

post image

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேச பொதுத் தோ்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு 2 முறை நடத்தப்பட உள்ளது. முதல் பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17 முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது பொதுத் தோ்வு 2026 மே 15 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடத்தப்படும்.

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறும்.

பொதுத் தோ்வு தோ்வுத் தாள் திருத்தும் பணியைப் பொருத்தவரை ஒவ்வொரு பாடத் தோ்வுக்கு 10 நாள்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டு 12 நாள்களில் நிறைவு செய்யப்படும். உதாரணமாக, ஒரு பாடத்துக்கான தோ்வு 2026 பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறுகிறது என்றால், அந்த தோ்வுத் தாள் திருத்தும் பணி மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டு மாா்ச் 15-இல் நிறைவு செய்யப்படும் என்றாா்.

டிரம்ப் - மோடி விரைவில் சந்திப்பு! அமெரிக்க அதிகாரி தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நேரில் சந்திப்பார்கள் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இந்திய பொருள்களுக்கு 50 ச... மேலும் பார்க்க

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க