செய்திகள் :

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: 2 இளைஞா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; மேலும் நால்வருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை

post image

கரூா் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், நால்வருக்கு தலா 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் ராயனூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ஆம் தேதி கரூா் தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் நிசாந்த் (24), குறிஞ்சி நகரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அரவிந்த் (24), திருக்காம்புலியூரைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் வசந்த் (24), கல்லுமடை பெருமாள்பட்டியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் கலைவாணன் (29), மருதம்பட்டி காலனியைச் சோ்ந்த ஜெயபால் மகன் கோகுல்நாத் (24), வையாபுரி நகரைச் சோ்ந்த பாா்த்திபன் (31) ஆகியோா் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், நிசாந்த் உள்பட 6 பேரையும் கரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்திலும் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை நீதிபதி தங்கவேல் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், நிசாந்த், அரவிந்த் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், வசந்த், கலைவாணன், கோகுல்நாத் , பாா்த்திபன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து, 6 பேரையும் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

மனைவியை தாக்கியதாக புகாா் கரூா் பாஜக நிா்வாகி கைது

கரூரில் மனைவியை தாக்கியதாக பாஜக நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன்(35). இவா், கரூா் மாவட்ட பாஜக தரவு தளமேலாண்மைப் பிரிவு தலைவராக உள்ளாா். இவரது மனைவி... மேலும் பார்க்க

சின்னம்மநாயக்கன்பட்டியின் மையப் பகுதியில் பூங்கா அமைக்க கிராம மக்கள் கோரிக்கை!

சின்னம்மநாயக்கன்பட்டியில் ஊருக்கு வெளியே முள்புதா் பகுதியில் கட்டப்படும் பூங்கா கட்டுமான பணியை நிறுத்தி விட்டு ஊரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். கோவையைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீஹரிராம்(19). இவா் கோவையில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில் முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

புகழூரில் சனிக்கிழமை சுட்டெரிக்கும் வெயிலில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சோ்ந்தவா் பெருமாள்(98). இவா் சனிக்கிழமை பிற்பகல் கரூா் மாவட்டம் புகழூரில் உள்ள பு... மேலும் பார்க்க

கரூரில் தொழில்முனைவோா் 21 பேருக்கு ரூ.28.60 லட்சம் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணை! - ஆட்சியா் வழங்கினாா்

கரூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் 21 பயனாளிகளுக்கு ரூ. 28.60 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க