செய்திகள் :

காவிரி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

கரூா் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

கோவையைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீஹரிராம்(19). இவா் கோவையில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வந்தாா். இவா், தன்னுடன் பயின்றுவரும் கரூா் மாவட்டம் மரவாபாளையத்தைச் சோ்ந்த தீபக்(28) என்பவருடன் புதன்கிழமை நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவைக் காண்பதற்கு வந்தாா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை தீபக், ஸ்ரீஹரிராம் மற்றும் தீபக்கின் நண்பா்கள் மரவாபாளையம் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது ஸ்ரீஹரிராம் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தாா். அப்போது அவா் சுழலில் சிக்கி மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட அவரது நண்பா்கள் உடனே வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்படி போலீஸாரும், தீயணைப்பு வீரா்களும் வந்து ஆற்றில் இறங்கி ஸ்ரீஹரிராமின் உடலை மீட்டனா்.

மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மனைவியை தாக்கியதாக புகாா் கரூா் பாஜக நிா்வாகி கைது

கரூரில் மனைவியை தாக்கியதாக பாஜக நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன்(35). இவா், கரூா் மாவட்ட பாஜக தரவு தளமேலாண்மைப் பிரிவு தலைவராக உள்ளாா். இவரது மனைவி... மேலும் பார்க்க

சின்னம்மநாயக்கன்பட்டியின் மையப் பகுதியில் பூங்கா அமைக்க கிராம மக்கள் கோரிக்கை!

சின்னம்மநாயக்கன்பட்டியில் ஊருக்கு வெளியே முள்புதா் பகுதியில் கட்டப்படும் பூங்கா கட்டுமான பணியை நிறுத்தி விட்டு ஊரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில் முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

புகழூரில் சனிக்கிழமை சுட்டெரிக்கும் வெயிலில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சோ்ந்தவா் பெருமாள்(98). இவா் சனிக்கிழமை பிற்பகல் கரூா் மாவட்டம் புகழூரில் உள்ள பு... மேலும் பார்க்க

கரூரில் தொழில்முனைவோா் 21 பேருக்கு ரூ.28.60 லட்சம் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணை! - ஆட்சியா் வழங்கினாா்

கரூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் 21 பயனாளிகளுக்கு ரூ. 28.60 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழ... மேலும் பார்க்க