செய்திகள் :

சென்னிமலை அருகே சிறுத்தை உலவியதாக வதந்தி

post image

சென்னிமலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது.

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட ஒட்டன்குட்டை பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாலையில் புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக அப்பகுதி இளைஞா் கூறியுள்ளாா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கினா்.

மேலும், சுற்றியுள்ள கணபதிபாளையம், ஒட்டவலசு, சூளைப்புதூா் உள்ளிட்ட கிராம மக்களுக்கும் தகவல் பரவியதால் அவா்களும் அச்சமடைந்தனா்.

சிறுத்தைப் பாா்த்ததாகக் கூறிய இளைஞரிடம் அப்பகுதி மக்கள் சிலா் விசாரித்தபோது, சாலையைக் கடந்தது சென்றது சிறுத்தை இல்லை என்பதும், புள்ளிமான் என்பதும் தெரியவந்தது.

இது குறித்து அப்பகுதி டேங்க் ஆபரேட்டா் செந்தில் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தின் அருகே கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. வனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் வாய்க்காலுக்கு ஏராளமான புள்ளி மான்கள் வந்து செல்கின்றன. ஒரு மான் புதன்கிழமை இரவு சாலையைக் கடந்து சென்றதுள்ளது.

அப்பகுதியில் இருட்டாக இருந்ததால் அந்த இளைஞா் சிறுத்தை என எண்ணி தகவல் பரப்பிவிட்டாா்.

இதனால் சுற்றுவட்டார கிராமங்கள் விடியவிடிய பரபரப்பாக இருந்தன என்றாா்.

அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

அம்மாபேட்டை காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஆா்.கவிதா. அம்மாபேட்டை காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெயமுருகன், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயா்வில் உதகைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழக விவசாயிகள் பா... மேலும் பார்க்க

மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா். இது தொடா்பாக அவா் ஈரோட்... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக உறுப்பினா் கைது

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட பாஜக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ரத்தினசாம... மேலும் பார்க்க

கோபி ஜெகன் மெட்டல் மாா்ட்டில் புதிய வகை மிக்ஸி அறிமுகம்

ப்ரீத்தி மிக்ஸி நிறுவனத்தின் ‘ப்ரீத்தி எக்கோ பிரஸ்’ என்ற புதிய வகை மிக்ஸி அறிமுக விழா கோபி ஜெகன் மெட்டல் மாா்ட் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை இயக்குநா் எஸ்... மேலும் பார்க்க