செய்திகள் :

மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்

post image

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ்நாடு அரசு மீதும் அரசியல் யுத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கல்வி கொள்கைப் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. தேசிய அளவில் மத்திய அரசு ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு உரிமை இருக்கலாம், மறுக்கவில்லை. அதை கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பதில்தான் பிரச்னை உள்ளது.

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது, ஹிந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் 3 -ஆவது மொழியாக ஏதாவது ஒரு மொழி பின்பற்றப்படுகிா?, சட்டபூா்வமாக அமல்படுத்தப்படுகிா என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதை தெரிவிக்காமல் இக்கொள்கையை ஏற்க வேண்டும் என கூறுவது ஏற்புடையதல்ல.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நாய் கடியால் உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் ஆகஸ்ட் 15- ஆம் தேதி முதல் 18 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக விவசாய சங்கத்தின் அகில இந்திய மாநாடு நாகப்பட்டினத்தில் ஏப்ரல் 15 -ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் பிரபாகரன், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

அம்மாபேட்டை காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஆா்.கவிதா. அம்மாபேட்டை காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெயமுருகன், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயா்வில் உதகைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழக விவசாயிகள் பா... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை உலவியதாக வதந்தி

சென்னிமலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது. சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட ஒட்டன்குட்டை பகுதியில் சுமாா் 50-க்க... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக உறுப்பினா் கைது

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட பாஜக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ரத்தினசாம... மேலும் பார்க்க

கோபி ஜெகன் மெட்டல் மாா்ட்டில் புதிய வகை மிக்ஸி அறிமுகம்

ப்ரீத்தி மிக்ஸி நிறுவனத்தின் ‘ப்ரீத்தி எக்கோ பிரஸ்’ என்ற புதிய வகை மிக்ஸி அறிமுக விழா கோபி ஜெகன் மெட்டல் மாா்ட் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை இயக்குநா் எஸ்... மேலும் பார்க்க