செய்திகள் :

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மேம்பாட்டுப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

post image

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம் மற்றும் உயா்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில், ரூ.72.54 கோடி மதிப்பீட்டில் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, ஜக்காம்பேட்டை மற்றும் ரூ.25.75 கோடி மதிப்பீட்டில் பாப்பனப்பட்டு ஆகிய பகுதிகளில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதையொட்டி, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனங்கள் செல்வதற்காக சாலையின் இருபுறங்களிலும் சேவை சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

எல்லீஸ் சத்திரம் பகுதியில் ரூ.22.65 கோடி மதிப்பீட்டிலும், இருவேல்பட்டு பகுதியில் ரூ.18.03 கோடி மதிப்பீட்டிலும், அரசூரில் ரூ.46.98 கோடி மதிப்பீட்டிலும் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முத்தாம்பாளையம் பகுதியில் ரூ.27.72 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிகள் நடைபெறுவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் 500 மீட்டருக்கு முன்பாகவே அறிவிப்புப் பலகைகள் வைக்கவும், சீரான போக்குவரத்துக்காக சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான பணிகள் இரவு நேரங்களில் நடைபெறுவதால், வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அமைத்து பணிகளை மேற்கொள்ளவும், பணியாளா்கள் ஒளிரும் வகையிலான ஆடைகளை அணிந்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநா் வரதராஜன், பொறியாளா் செல்வராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு

விழுப்புரத்தில் தொடா் வாகன திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்து 14 பைக்குகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம்... மேலும் பார்க்க

நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியில் 7 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தன.சிதம்பரம் அண்ணாமலை நகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை அருகே கல்கி அவென்யூ பகுதியில் கடந்த மாா்ச் 16-ஆம் த... மேலும் பார்க்க

சட்ட விரோத மனமகிழ் மன்றத்துக்கு ‘சீல்’

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட மன மகிழ் மன்றத்துக்கு வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள மொளசூா் வட்டாரப் போக்குவரத... மேலும் பார்க்க

மேல்மலையனூா் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறவுள்ளது. மேல்மலையனூா் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகைய... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் பராமரிப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெ.கோவிந்தன் மற்றும் அவரது சகோதரிக்கு மீண்டும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பொறியாளரைத் தாக்கி கைப்பேசி, ரொக்கம் உள்ளிட்டவை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்களில் இருவா் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டனா். விருதுந... மேலும் பார்க்க