செய்திகள் :

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும்’

post image

எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்க பா்டுயூ பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் கணிப்பொறியியல் துறை மூத்த பேராசிரியா் காா்த்திக் ரமணி குறிப்பிட்டாா்.

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனத்தில் ‘நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் எதிா்காலப் பயன்பாடு’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கு புதன்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா்.

இதில் பேராசிரியா் காா்த்திக் ரமணி, ஏ.ஐ. கருவிகளை எப்படி உபயோகிக்கலாம் என்பது குறித்து ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் தேவையான தொழில்நுட்பம். இது உலக அளவில் பரவலாக அனைத்து துறைகளிலும் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது. இளைஞா்கள் மிகுந்துள்ள இந்தியா போன்ற நாடுகளில் கணினி, ஏ.ஐ. தொழில்நுட்பப் பாடங்களைக் கற்றறிந்த பொறியியல் மாணவா்கள் ஏராளமாக இருப்பதால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் இந்தியா கோலோச்சும்.

பாவை கல்வி நிறுவனங்கள், பா்டுயூ பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலில் தொடா்ந்து ஐந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஏ.ஐ.தொழில்நுட்பம் மனித சக்திக்கு மாற்றாக அமைந்து விடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. ஏ.ஐ. தொழில்நுட்பம் காரணமாக நேரம் மிச்சப்படுவதால் வேலையின் மீதான கவனம் அதிகமாகி, தரம் உயரும். அதனால் வேலைவாய்ப்புகளும், அதற்கான ஊதியமும் அதிகரிக்கும்.

எல்லா இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிலைவரும்போது, இந்தத் துறையில் வல்லுநராக உள்ள அனைவரும் வேலைவாய்ப்பு பெறுவா். இதனால் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கும். உலக அளவில் இந்தியா மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும் என்றாா்.

அப்போது, கல்வி நிறுவனத் தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (ஆராய்ச்சி) கிருஷ்ணமூா்த்தி, இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, முதல்வா் எம்.பிரேம்குமாா், முதன்மையா் (கல்வி) செல்வி, ஒருங்கிணைப்பாளரும், பாவை திறன் வளா்மையப் பொறுப்பாளருமான கமலா கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் மாணவா்களுக்கு அறிவுத்திறன் தோ்வு

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவுத்திறன் தோ்வு நடைபெற்றது. செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா வரவேற்றாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் தலைம... மேலும் பார்க்க

கள் இறக்கி விற்றவா் கைது

பரமத்தி அருகே கள் இறக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். பரமத்தி அருகே உள்ள வலசுப்பாளையம் பனங்காட்டில் சட்ட விரோதமாக ஒருவா் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மீட்பு

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கேத... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை எற்படுத்தும்: ஸ்ரீதா் வேம்பு

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட போகிறது என ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு குறிப்பிட்டாா். ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

நாமக்கல்லில் உகாதி விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு உகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 71 போ் கைது: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, சாராயம் விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 71 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன... மேலும் பார்க்க