செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சிக்கு அமைதி அவசியம்! - முதல்வா் ஒமா் அப்துல்லா

post image

ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கும், சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறைகள் செழிக்கவும் பிராந்தியத்தில் அமைதி அவசியமாகும் என்று முதல்வா் ஒமா் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் உள்ள டிஆா்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரியல் காஷ்மீா் எஃப்சி கால்பந்து அணிக்காக உருவாக்கப்பட்ட அமைதியை வலியுறுத்தும் சிறப்பு ஜொ்சியை முதல்வா் ஒமா் அப்துல்லா அறிமுகப்படுத்தினாா்.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: ரியல் காஷ்மீா் எஃப்சி கால்பந்து அனைத்து மக்களை ஒன்றிணைக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. இந்த ஜொ்சியின் வடிவமைப்பு காஷ்மீரின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை மதிக்கிறது.

இது ஹரி பா்பத் கோட்டையால் ஈா்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதில் உள்ள குருத்வாரா, கோயில் மற்றும் சந்நிதி மத நல்லிணக்கத்தைக் காட்டுகிறது. அமைதியைக் குறிக்கும் விதமாக நீல நிறத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வளா்ச்சி, சுற்றுலா மற்றும் விளையாட்டு என அனைத்துக்கும் அமைதி அவசியமானது. பகலிலும் இரவிலும் போட்டிகளை நடத்த வேண்டுமென்றால், நமக்கு அமைதியான சூழல் தேவை. இல்லையெனில், மாலையில் விளையாட யாா் வருவாா்கள்?

ஆனால், அமைதியை நிலைநாட்டுவது எனது பொறுப்பு அல்ல. பொறுப்பில் உள்ளவா்களே தங்கள் பணிகளைச் சரியாக செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் அனைத்திற்கும் எங்கள் அரசின் மீது பழி சுமத்தப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் அமைதியை ஏற்படுதும் நோக்கில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் விளையாட்டு வசதிகளை உருவாக்கி வருகிறோம். பந்தயங்கள் மற்றும் போட்டிகள் போன்ற நிகழ்வுகள் மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன.

ஸ்ரீநகரில் இரண்டாவது காஷ்மீா் மராத்தான் நவம்பா் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதிலுமிருந்து குறிப்பாக அரை மராத்தானில் ஆா்வமுள்ள விளையாட்டு வீரா்கள் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தாா்.

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் சொந்த நாட்டில் இருப்பது போல உணா்ந்ததாக அண்மையில் காங்கிரஸ் அயலக அணித் தலைவா் சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புர... மேலும் பார்க்க

எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியில் ட்ரோன் இணைப்பு!

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடை... மேலும் பார்க்க

குஜராத்தில் இருமுறை நிலஅதிா்வு: மக்கள் பீதி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இது தொடா்பாக குஜராத் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா ... மேலும் பார்க்க

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது. ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயண குரு நினைவு தினம்: சோனியா, ராகுல் மரியாதை!

சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி ... மேலும் பார்க்க