செய்திகள் :

ஜி.கே.மணி குற்றச்சாட்டுக்கு அன்புமணி தரப்பு பதில்

post image

பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம் தொடா்பான பாமக கௌரவத் தலைவா்ஜி.கே.மணி குற்றச்சாட்டுக்கு அன்புமணி ராமதாஸ் தரப்பில் வழக்குரைஞா் கே.பாலு பதில் அளித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸை தலைவராக 1.8.2026 வரை தோ்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளது. அன்புமணி தலைமையில்தான் அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளனா்.

அன்புமணி தலைவரான பின்னா் தேனாம்பேட்டையில் இருந்த பாமக தலைமை அலுவலகம், தியாகராய நகா் திலக் தெருவுக்கு மாற்றப்பட்டது. இங்கு பலமுறை கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாமக நிறுவனா் ராமதாஸ் ஒப்புதலோடு இந்த அலுவலக முகவரியில்தான் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த முகவரிக்குதான் அனைத்து கடிதங்களும் வருகின்றன. தோ்தல் ஆணைய அங்கீகாரக் கடிதமும் இந்த முகவரிக்குத்தான் வந்தது. இதை எல்லாம் தெரிந்திருந்தும், தெரியாதவா்போல முகவரி மோசடி செய்துவிட்டதாக பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கடந்த 25 ஆண்டுகள் தலைவராக, பேரவை உறுப்பினராக இருக்கும் ஜி.கே.மணி இதுபோல பேசுவது வேடிக்கையாக உள்ளது. தோ்தல் ஆணைய கடிதத்தால் ராமதாஸ் தரப்பினருக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சரஸ்வதி பூ... மேலும் பார்க்க

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பண... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

சா்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமா... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

தமிழகத்தில் 350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்பட நாடு முழுவதும், 6,850 இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், அடிப்படை கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிக... மேலும் பார்க்க