செய்திகள் :

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: அமித் ஷா

post image

நாடு முழுவதும் புதிய வரி அமைப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டின் சான்றாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அமித் ஷா வெளியிட்ட பதிவில்,

புதிய வரி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் வேகமாக நகர்த்தும், வளமான நாடாக மாற்றும். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்குச் சேவை செய்யப் பிரதமர் மோடியின் உறுதியான உறுதிப்பாட்டின் சான்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

மோடி அரசு நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் அவர்களின் சேமிப்பு தொடர்ந்து உயரும். அன்றாட அத்தியாவசியப் பொருள்கள், சுகாதாரப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், கல்விப் பொருள்களின் ஜிஎஸ்டி விகிதங்களில் ஏற்பட்டுள்ள குறைப்பு, அவர்களின் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கும், அதிகமாகச் சேமிக்க ஊக்குவிக்கும்.

நவராத்திரியின் புனித நாளில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளுக்கு மோடி அரசின் பரிசு. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதி இன்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 390க்கும் மேற்பட்ட பொருள்களின் வரிகளில் குறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.

உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், ஆட்டோமொபைல்கள், விவசாயம், பொம்மைகள், விளையாட்டு மற்றும் கைவினைப்பொருள்கள், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், காப்பீடு போன்ற துறைகளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மாற்றமடைகின்றது.

ஜிஎஸ்டியில் முன்னெப்போதும் இல்லாத நிவாரணம் மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் அவர்களின் சேமிப்பையும் அதிகரிக்கும். பல்வேறு பால் பொருள்களுக்கு ஜிஎஸ்டி பூஜ்ஜியமாகிறது. சோப்பு, பற்பசை, முடிக்குப் பயன்படுத்து எண்ணெய், ஷாம்பு போன்ற அன்றாடப் பொருள்களில் முன்னெப்போதும் இல்லாத குறைப்புகளை ஏற்படுத்தும். ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, மூத்த குடிமக்கள் பாலிசி, 33 உயிர்காக்கும் மருந்துகள், நோயறிதல் கருவிகள், ஆக்ஸிஜன், அறுவைச் சிகிச்சை கருவிகள், மருத்துவம், பல் மற்றும் கால்நடை சாதனங்கள் மீதான குறைந்தபட்ச ஜிஎஸ்டி வரை, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டு மக்களின் சேமிப்பில் வரலாற்று வளர்ச்சியைக் கொண்டுவரும்.

விவசாய உபகரணங்கள் மற்றும் உரத் துறை மீதான ஜிஎஸ்டி குறைப்பால் விவசாயிகள் உற்சாகமாக உள்ளனர். மேலும் வாகனங்களின் விலையைப் பற்றியும் மக்கள் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்று அமித் ஷா கூறினார்.

கடினமான வளர்ச்சிப் பணிகளை கைவிடுவது காங்கிரஸின் இயல்பு: பிரதமர் மோடி

கடினமான எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் கைவிடுவது காங்கிரஸின் "இயல்பான பழக்கம்" என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ. 5,100 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்கள... மேலும் பார்க்க

குஜராத்தில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து(விடியோ)

குஜராத்தில் சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலம், போர்பந்தர் சுபாஷ்நகர் ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பல் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. ஜாம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மகாராஷ்டிரத்தையொட்டிய அபுஜ்மாத்தில் உள்ள வனப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த த... மேலும் பார்க்க

மும்பையில் வேகமாக வந்த சொகுசு கார் விபத்தில் சிக்கியது ! (விடியோ)

மும்பையில் கடற்கரை சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிர மாநிலம், தெற்கு மும்பையில் உள்ள கொலாபாவுக்கு அதிஷ் ஷா(52) லம்போர்கினி காரில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

திருப்பதியை வைத்து அரசியல் செய்வதா? ரூ.100 கோடி உண்டியல் பணம் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

திருப்பதி கோயிலை அரசியலுக்காகப் பயன்படுத்துவதா? என்று ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் - பாஜகவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில... மேலும் பார்க்க

ஒடிசாவில் சுவர் இடிந்து பழங்குடியின தம்பதியர் பலி!

ஒடிசாவின் பலாசோர் மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மண் சுவாரின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டத்தில் உள்ள பாஸ்தா காவல் நில... மேலும் பார்க்க