25 முதல் 45 வயதுள்ள பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் எ...
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய சலார் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
விரைவில், இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து புதிய திரைப்படத்தை பிரசாந்த் இயக்கும் அறிவிப்பு வெளியானது.
இதையும் படிக்க: சூர்யா - 45 படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்?
இப்படம் 2026 ஆம் ஆண்டு திரைக்கு வருமென்பதையும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று துவங்கியுள்ளது. முதல் நாளில் கலவரக்காட்சி ஒன்றை எடுத்து வருகின்றனர்.
The SOIL finally welcomes its REIGN to leave a MARK in the HISTORY books of Indian Cinema! #NTRNeel shoot has officially begun.
— Mythri Movie Makers (@MythriOfficial) February 20, 2025
A whole new wave of ACTION & EUPHORIA is ready to grip the Masses
MAN OF MASSES @tarak9999#PrashanthNeel@MythriOfficial@NTRArtsOfficial… pic.twitter.com/yXZZy2AHrA
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.