செய்திகள் :

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

post image

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.

பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்
பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்

நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்பில் இந்தியா - இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் நேற்றிரவே இங்கிலாந்திலிருந்து விமானத்தில் புறப்பட்ட மோடி, மாலத்தீவில் இன்று தரையிறங்கினார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் இருநாட்டு உறவு, வர்த்தகம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடும் மோடி, நாளை மாலத்தீவு நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்கவிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, ஜூலை 26, 27-ல் மோடி தமிழகத்துக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதன்படி, நாளை மாலை 5:50 மணியளவில் மாலத்தீவிலிருந்து விமானத்தில் புறப்படும் மோடி, இரவு 07:50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைவார்.

பின்னர் விமான நிலைய வளாகத்தில் 08:30 மணி முதல் 09:30 மணி வரை, விரிவாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை திறந்​து வைப்பதோடு, பல்வேறு திட்டப்​பணி​களை தொடங்கிவைத்து, புதிய பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டுவார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நிகழ்ச்சி முடிந்த பிறகு, 09:40 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கிளம்பும் மோடி 10:35 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைவார்.

அங்கிருந்து இரவு தங்கும் பகுதிக்கு செல்லும் மோடி, அடுத்த நாள் காலை 11 மணியளவில் திருச்சியிலிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி 11:50 மணியளவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் தரையிறங்குவார்.

அங்கு பிற்பகல் 12 மணி முதல் 01:30 மணி வரை ராஜேந்திர சோழன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பார் மோடி.

அதன் பின்னர் ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் மோடி, 02:30 மணியளவில் விமானத்தில் புறப்பட்டு 05:30 மணியளவில் டெல்லியில் தரையிறங்குவார்.

ECI முறைகேடு: `எங்களிடம் ஆதாரமிருக்கிறது' - Rahul Gandhi | Kamal DMK BJP | Imperfect Show 25.7.2025

* இந்திராவை முந்திய மோடி? * பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்! * இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் கையெழுத்து?* “இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வ... மேலும் பார்க்க

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

'அன்புமணி நடைபயணம்..'பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். அன்புமணிபாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க

``ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி அதிமுக'' - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வக... மேலும் பார்க்க