செய்திகள் :

'ஜெய் ஹிந்த்!' - Operation Sindoor -க்கு ராகுல் காந்தியின் பதிவு என்ன?

post image

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களை குறி வைத்து தகர்த்துள்ளது இந்திய ராணுவம். இந்த 9 இடங்களும் தீவிரவாதிகளின் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு, 'ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)' என்று பெயரிட்டுள்ளது.

கடந்த மாதம், காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தான் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ராணுவத்தினர்
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ராணுவத்தினர்

பஹல்காம் தாக்குதல் நடந்தப் போதிலிருந்தே, இந்தியா மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைத்தும் மத்திய அரசுக்கு உறுதுணையாக நிற்போம் என்று கூறியிருந்தது.

இதை தான் மத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கூறிவந்தார். அதாவது, 'இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு, நாங்கள் துணை நிற்போம்' என்பது தான் அது.

ராகுல் காந்தியின் பதிவு

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்தூருக்கு' ஆதரவளித்து, "ஆயுத படையை நினைத்து பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!' என்று தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

Operation Sindoor: "இந்தியாவின் தாக்குதல் நியாயமானது!" - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஆதரவு

தீவிரவாதிகள் குழுவினர் ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் ... மேலும் பார்க்க

Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: '1000 இளைஞர்களுடன் யுத்த களத்திற்கு செல்ல தயார்'- கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்த... மேலும் பார்க்க

Operation Sindoor: `இந்திய ராணுவ நடவடிக்கையை வரவேற்கிறேன்; அதேசமயம் இது..."- திருமாவளவன் சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்க... மேலும் பார்க்க

`போர் வேண்டாம்; பாகிஸ்தான் பெரிய பிரச்னையாக மாற்றாமல் இருக்க வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்... பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?

ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட்... மேலும் பார்க்க