செய்திகள் :

டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை! -செந்தில் பாலாஜி

post image

டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்று மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த வாரம் மார்ச் 6 ஆம் தேதியில் இருந்து 3 நாள்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்தச் சோதனையில் பார் உரிமங்கள் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பட்ஜெட்: அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!

மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. இதில்,  அரசு கணக்கிலும் சேராமல் ரூ.1000 கோடிக்கும் முறைகேடு நடந்தது அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “எந்த முகாந்திரமும் இல்லாமல் டாஸ்மாக்கில் ஊழல் என குற்றம் சாட்டப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

ரூ.1,000 கோடி ஊழல் என ஒருவர் அறிக்கை விடுகிறார். அதன்பின் அமலாக்கத் துறையும் அதையே சொல்கிறது. ஒருவர் ரூ.1000 கோடி ஊழல் எனச் சொல்கிறார். மற்றொருவர் ரூ.40,000 கோடி முறைகேடு என்று சொல்கிறார். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவுகிறது.

டெண்டரில் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. டாஸ்மாக்கில் தவறு நடந்ததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிக்க: 3 வழித்தடங்களில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை! ரயில்வே அறிவிப்புகள்!

ஒரு ரூபாயில் தமிழகத்தின் வரவு - செலவு கணக்கு!

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு வரும் வருவாய் மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் இன்று வெளியாகி... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்த தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இன்று(வெள்ளிக்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. ... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் யாருக்கு? மட்சுவோ பாஷோ யார்?

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டது.பெற்றோரை இழந்து, வறிய நிலையில், உறவினர்களின் பராமரிப்பில் இருக்கும் குழ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் - அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 46,767 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் என்று அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள... மேலும் பார்க்க

மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்! - விஜய்

மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இதுபற்றி தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “தமிழ்நாடு... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்டில் வெளியான 10 சிறப்பான அறிவிப்புகள்!

வரும் 2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பலராலும் வரவேற்கப்படும் பத்து முக்கிய அறிவிப்புகள் என்னவென்றால்..தமிழக நிதிநிலை அறிக்கைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட... மேலும் பார்க்க