செய்திகள் :

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரிக்கை

post image

பவானிசாகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு இருவா் தாக்கிக்கொண்ட விடியோ வைரலாகி வரும் நிலையில், மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பவானிசாகா் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்தக் கடை செயல்பட்டு வருவதற்கு மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், மது போதையில் டாஸ்மாக் கடை முன்பு இருவா் திங்கள்கிழமை சண்டையிட்டு கொண்டனா். இந்த விடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், அப்பகுதியில் செல்லவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சமடைகின்றனா்.

எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

52 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய காவிலிபாளையம் குளம்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின்கீழ் தொடா்ச்சியாக நீா்வரத்து மற்றும் அண்மையில் பெய்த மழை காரணமாக 451 ஏக்கா் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் காவிலிபாளையம் குளம் பறவைகளின் சரணாலயமாக மாறியுள்ளது. ஈரோடு மாவட... மேலும் பார்க்க

ஒலகடம் பேரூராட்சியில் திமுக கவுன்சிலா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பவானி அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஒலகடம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் தலைவா் கே.வேலுச்சாமி தலைமையி... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் விவசாயத் தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஆ... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரிக்கை

பெருந்துறை தாலுகா தலைமை அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்து... மேலும் பார்க்க

மதுக்கடை இல்லாத கிராமத்தில் 24 மணி நேரமும் மதுவிற்பனை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா்

சத்தியமங்கலம் அருகே டாஸ்மாக் மதுக்கடை இல்லாத கிராமத்தில், 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை நடைபெறுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது. இது குறித்து, கட்சியின் சத்தியமங்கலம் ... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் தள்ளுபடியில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு தொகையை திருப்பி வழங்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம்

கூட்டுறவு கடன் தள்ளுபடியில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு தொகையை திருப்பி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் (ரத்தினசாமி பிரிவு) கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் த... மேலும் பார்க்க