செய்திகள் :

டெல்லியில் சூறாவளிக் காற்றுடன் கனமழை; 120 விமானச் சேவை பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு

post image

டெல்லியில் இன்று காலை திடீரென சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. புழுதியுடன் வீசிய சூறாவளிக் காற்றால் டெல்லி மற்றும் சுற்றுப்பகுதியில் ஏராளமான மரங்கள் ஆங்காங்கே உடைந்து விழுந்தன.

விமானச் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி வரவேண்டிய விமானங்கள் அகமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

டெல்லியிலிருந்து புறப்பட்ட 21 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பக்க பதிவில், டெல்லிக்கு வரவேண்டிய மற்றும் டெல்லியிலிருந்து புறப்படவேண்டிய விமானங்கள் தாமதமாகலாம் அல்லது வேறு இடங்களுக்குத் திருப்பிவிடப்படலாம். இதனால் ஒட்டுமொத்த விமானச் சேவையில் பாதிப்பு ஏற்படலாம்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி லஜ்பத் நகர், மோதி பாக், மிண்டோரோடு, ரிங் ரோடு போன்ற பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது.

இதனால் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி இருக்கிறது.

டெல்லி துவாரகா பகுதியில் பலத்த காற்று காரணமாக மரம் ஒன்று ஒடிந்து வீட்டின் மீது விழுந்தது. இதனால் வீடு இடிந்து உள்ளே இருந்த ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயில் தண்டவாளத்தில் வயர்கள் மீது மரங்கள் ஒடிந்து விழுந்ததால் 20 ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

120 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி முழுக்க 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை, சூறாவளி தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

VIT: மியான்மார் நிலநடுக்க நிவாரணத்திற்கு நன்கொடை கொடுத்த VIT போபால்

மியான்மாரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளை ஆதரிக்க, வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் (VIT) உதவி துணைத் தலைவரான செல்வி காதம்பரி ச.விஸ்வநாதன், 2,45,92,500 மியான்மார் கியாட்கள... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: `5 நாள்களுக்கு பிறகு' இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்!

கடந்த வெள்ளிக்கிழமை, மியான்மரில் மிகப்பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 2,700 என இதுவரை வெளியாகி உள்ள தரவுகள் கூறுகின்றன. இது மிகத் துயரமான சம்பவம் தான். ஆனால... மேலும் பார்க்க