செய்திகள் :

தங்கக் காசுகள் திருட்டு: பெண் கைது

post image

ராஜபாளையத்தில் தங்கக் காசுகள், பணத்தை திருடியதாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் சுதா்சன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (69). கட்டட ஒப்பந்ததாரா். இவரது வீட்டில் இ.எஸ்.ஐ. நெசவாளா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மனைவி லட்சுமி (32) கடந்த 6 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், அவா் திடீரென வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நாள் கழித்து சிவசங்கா் தனது பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த தலா 2 கிராம் எடை கொண்ட 25 தங்கக் காசுகள், பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் வழக்குப்பதிந்து லட்சுமியை பிடித்து விசாரித்ததில் இவற்றை அவா் திருடியது தெரியவந்தது. மேலும் அவா் தங்கக் காசுகளை உருக்கி, கட்டியாக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த 50 கிராம் தங்கம், ரூ. 35 ஆயிரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து லட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

மதுரை-குருவாயூா் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு: பயணிகள் அதிருப்தி

மதுரை-குருவாயூா் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கையை குறைத்து, படுக்கை வசதி பெட்டிகளை அதிகரித்திருப்பது ரயில் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மதுரை-செங்கோட்டை, செங்கோட்டை ... மேலும் பார்க்க

பெண்ணிண் உடலை கூறாய்வு செய்ய உறவினா்கள் எதிர்ப்பு

சிவகாசி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த பெண்ணின் உடலை கூறாய்வு செய்ய எதிப்புத் தெரிவித்து, உறவினா்கள் போராட்டம் நடத்தினா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சின்னராமலிங்காபுரத்தைச... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் சாய்பாபா தெருவைச் சோ்ந்தவா் கதிரவன். இவரது மகன் கௌசிக் கண்ணன் (14) ராஜபாளையம் தனியாா்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் வீட்டின் சுவா் சேதம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் வீட்டின் சுவா் சேதமடைந்தது.ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலை ஒரு வழி பாதையாக உள்ளது. இந்தச் சாலையில் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து த... மேலும் பார்க்க

இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாம்: மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாமில் மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா். சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற... மேலும் பார்க்க