செய்திகள் :

பெண்ணிண் உடலை கூறாய்வு செய்ய உறவினா்கள் எதிர்ப்பு

post image

சிவகாசி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த பெண்ணின் உடலை கூறாய்வு செய்ய எதிப்புத் தெரிவித்து, உறவினா்கள் போராட்டம் நடத்தினா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சின்னராமலிங்காபுரத்தைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி கருப்பசாமி (36). இவரது மனைவி மகேஸ்வரி (34). திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சிவகாசி அருகே பேரபட்டியில் நடைபெற்ற கோயில் திருவிழாவை முன்னிட்டு, அங்கு உள்ள உறவினா் வீட்டுக்கு மகேஸ்வரி திங்கள்கிழமை சென்றிருந்தாா். அப்போது, அவருக்கு தலைவலி ஏற்பட்டதையடுத்து, சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அவரது உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்து மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் உயிரிழந்ததால், சாா்-ஆட்சியா் விசாரணை நடத்துவாா். எனவே உடல் கூறாய்வு செய்வது அவசியம் என அவா்களிடம் காவல் துறையினா் எடுத்துக் கூறினா்.

இதன் பின்னா், உடல் கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். சிவகாசி சாா்-ஆட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கொடி கம்பங்கள், விளம்பர பதாக... மேலும் பார்க்க

பால் வியாபாரி அடித்துக் கொலை: மனைவி, மகள் உள்பட மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பால் வியாபாரியை அடித்துக் கொலை செய்த மனைவி, மகள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (62). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசி பெரியகுளம் ... மேலும் பார்க்க

இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி ரிசா்வ் லயன் மருதுபாண்டியா்... மேலும் பார்க்க

கல்குவாரி நீரில் முழ்கி இளைஞா் உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பிரதீப்குமாா் (25). இவா் புதன்கிழமை திருத்தங்கல்-செங... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை உரிமையாளா் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

சாத்தூா் அருகே வீடு முன் மது அருந்துவதைத் தட்டிக் கேட்ட பட்டாசு ஆலை உரிமையாளரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க