செய்திகள் :

பால் வியாபாரி அடித்துக் கொலை: மனைவி, மகள் உள்பட மூவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பால் வியாபாரியை அடித்துக் கொலை செய்த மனைவி, மகள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (60). பால் வியாபாரியான இவருக்கு ஈஸ்வரி ( 55) என்ற மனைவியும், தேவயாணி (27) என்ற மகளும் உள்ளனா். இந்த நிலையில், தேவயாணிக்கும், காா்த்திக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவயானி கணவரைப் பிரிந்து பெற்றோா் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். காா்த்திக் மனைவி, குழந்தைகளை பலமுறை அழைக்க வந்தபோது, சுப்பிரமணி அனுப்பி வைக்க முயற்சி செய்தாா். ஈஸ்வரி தேவயானியை அனுப்பி வைக்க மறுத்து தகராறு செய்து வந்தாா்.

இதன் காரணமாக, சுப்பிரமணிக்கும், இவரது மனைவி, மகளுக்கு அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சுப்பிரமணியம் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சுப்பிரமணியம் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், மனைவி ஈஸ்வரி, மகள் தேவயாணி, ஈஸ்வரியின் தம்பி செல்வகுமாா் (45) ஆகிய மூவரும் சோ்ந்து மருமகனுக்கு ஆதரவாக பேசிய சுப்பிரமணியத்தை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரி, மகள் தேவயாணி, செல்வகுமாா் ஆகிய மூவரையும கைது செய்தனா்.

படவிளக்கம்; உயிரிழந்த பால் வியாபாரி சுப்பிரமணி, மனைவி ஈஸ்வரி, மகள் தேவயாணி, மைத்துனா் செல்வகுமாா்

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமிக்கப்பட்டாா். இந்த தகவலை நகராட்சி நிா்வாக இயக்குநா் எஸ்.சிவராசு வியாழக்கிழமை வெளியிட்டாா். செங்கல்பட்டில் பணிபுரிந்து வரும் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் கே... மேலும் பார்க்க

அமைச்சரைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடி அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, சாத்தூரில் அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் முக்குராந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆா்.... மேலும் பார்க்க

நிறைவடைந்த வளா்ச்சிப் பணிகளை திறந்து வைத்த அமைச்சா்!

சாத்தூா் பகுதியில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்ற... மேலும் பார்க்க

கோயில் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 போ் கைது

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலின் மூலவா் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சனாபுரத்தில் 15... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சு... மேலும் பார்க்க