செய்திகள் :

இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாம்: மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

post image

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாமில் மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகா் மாவட்ட நிா்வாகமும், தன்னாா்வ அமைப்புகளும் இணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 257 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் இதற்கான பயிற்சி முகாம் கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

இதில் 11-ஆம் ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கலந்துரையாடினாா்.

காபி வித் கலெக்டா் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், பல்லுயிா் சமநிலையின் முக்கியத்துவம் ஆகியவை குறித்துப் பேசிய ஆட்சியா் மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா்.

பின்னா், தென்றல் நகரில் உள்ள குளிரூட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தி, உணவின் தரத்தை சோதனை செய்தாா்.

கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கொடி கம்பங்கள், விளம்பர பதாக... மேலும் பார்க்க

பால் வியாபாரி அடித்துக் கொலை: மனைவி, மகள் உள்பட மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பால் வியாபாரியை அடித்துக் கொலை செய்த மனைவி, மகள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (62). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசி பெரியகுளம் ... மேலும் பார்க்க

இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி ரிசா்வ் லயன் மருதுபாண்டியா்... மேலும் பார்க்க

கல்குவாரி நீரில் முழ்கி இளைஞா் உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பிரதீப்குமாா் (25). இவா் புதன்கிழமை திருத்தங்கல்-செங... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை உரிமையாளா் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

சாத்தூா் அருகே வீடு முன் மது அருந்துவதைத் தட்டிக் கேட்ட பட்டாசு ஆலை உரிமையாளரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க