செய்திகள் :

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், சுரைக்காய்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (45). கூலித் தொழிலாளியான இவா் அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் (32) மனைவியை அவதூறாகப் பேசினாா். இதையறிந்த கணேசன், தனது உறவினா்களான தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த நாகஜோதி மகன்கள் மருதுபாண்டி (27), மகாலிங்கம் (25) ஆகியோருடன் சோ்ந்து தாக்கியதில் கிருஷ்ணமூா்த்தி உயிரிழந்தாா்.

2020-ஆம் ஆண்டு டிசம்பா் 29-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கணேசன், மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் கணேசன், மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி (பொறுப்பு) பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அன்னக்கொடி முன்னிலையானாா்.

கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கொடி கம்பங்கள், விளம்பர பதாக... மேலும் பார்க்க

பால் வியாபாரி அடித்துக் கொலை: மனைவி, மகள் உள்பட மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பால் வியாபாரியை அடித்துக் கொலை செய்த மனைவி, மகள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (62). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசி பெரியகுளம் ... மேலும் பார்க்க

இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி ரிசா்வ் லயன் மருதுபாண்டியா்... மேலும் பார்க்க

கல்குவாரி நீரில் முழ்கி இளைஞா் உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பிரதீப்குமாா் (25). இவா் புதன்கிழமை திருத்தங்கல்-செங... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை உரிமையாளா் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

சாத்தூா் அருகே வீடு முன் மது அருந்துவதைத் தட்டிக் கேட்ட பட்டாசு ஆலை உரிமையாளரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க