செய்திகள் :

தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

post image

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும் தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக்கோரி பல்வேறு சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதையும் படிக்க: சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

இந்நிலையில், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தண்டனைக் கைதிகளுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தால் தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ, அவசர விடுப்போ வழங்கத் தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனைக் கைதிகளுக்கு எதிரான வேறு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தால், அந்த கைதிக்கு விடுப்பு பெற இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து கைதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

வேதங்களின்படி அம்பேத்கா் பிராமணா்! நடிகா் கருத்தால் சா்ச்சை!

‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை (பிப்.10) தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்றஇறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்க... மேலும் பார்க்க

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

இன்று லேசான பனிமூட்டம் நிலவும்

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு

நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்... மேலும் பார்க்க

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.கோமலாஹரி பி... மேலும் பார்க்க