செய்திகள் :

தனியார் காப்பகத்தில் குழந்தையை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

post image

கோவை : கோவை அருகே தனியார் காப்பகத்தில் குழந்தையை கெடூரமாக தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

கோவையில் உயிர் அமைப்பின் சார்பில் அவிநாசி சாலை அண்ணா சிலை பகுதியில் இருந்து விமான நிலையம் வரை சாலை பாதுகாப்பு குறித்து மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஆட்சியர் பவன்குமார், கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் தனியார் காப்பகத்தில் குழந்தையை ஒருவர் கொடூரமாக தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறித்த கேள்விக்கு, காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பூ மார்க்கெட் விடியோ விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் புகார்களை பெற்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். யு-டர்ன் சம்பந்தமாக மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். சொகுசு கார்களுக்கு அபராதம் விதிக்காமல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதித்து வருவது தொடர்பாக காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஓட்டுநர், கிளார்க் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

Action will be taken against the person who attacked the child in a private nursery says Collector

அறுவை சிகிச்சை குழந்தைப் பேறுக்கு பேராசை பிடித்த மருத்துவர்களே காரணம்: சந்திரபாபு நாயுடு

அமராவதி: நாட்​டிலேயே அறுவை சிகிச்சை முறை​யில் குழந்தை பெற்​றுக் கொள்​வ​தில் ஆந்​திரம் முதலிடம் வகிப்பதற்கு "பேராசை பிடித்த மருத்துவர்களே" காரணம் என குற்றம்சாட்டிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அறுவை ... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

கடலூா் ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சி, ஓட்டேரி அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்... மேலும் பார்க்க

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 5-ல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், டிசம்பா் 5 ஆம் தேதி தமிழகத்தினுடைய அனைத்து மாவட்டங்க‌ளிலும், அந்த‌ந்த‌ மாவ‌ட்ட‌ ஆட்சியர் அலுவலகங்களின்... மேலும் பார்க்க

எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா காலமானார்!

பிரபல எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா உடல் நலக்குறைவால் காலமானார். கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளரான எஸ். எல். பைரப்பா இந்தியளவில் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். இவர் எழுதிய பருவம், ஒரு குடும்பம் சிதைகிற... மேலும் பார்க்க

உலகை நானே காப்பாற்றனுமா... டிரம்ப்பின் அடுத்த புலம்பல்!

நியூயார்க்: நான் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற ஏழு மாதங்களில் ஏழு போா்களை நிறுத்தியுள்ளதாக தொடர்ந்து புலம்பி வரும் டொனால்ட் டிரம்ப், உலக பிரச்னைகளை தீர்க்கும் என்னை பாராட்டி ஐ.நா. சபையிடமிருந்த... மேலும் பார்க்க

ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12 இல் வெளியாகும்: நடிகர் ரஜினிகாந்த் தகல்

ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 2023-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர். இந்த படத்தை... மேலும் பார்க்க