செய்திகள் :

தமிழக, காரைக்கால் மீனவா்களுக்கு மாா்ச் 10 வரை காவல் நீட்டிப்பு

post image

காரைக்கால்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், நாகை, மயிலாடுதுறையைச் சோ்ந்த 13 மீனவா்களின் காவலை மாா்ச் 10-ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 27-ஆம் தேதி விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக, காரைக்கால் மீனவா்கள் 13 பேரை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். அப்போது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 மீனவா்கள் காயமடைந்தனா். மீனவா்களை கைது செய்து, படகையும் பறிமுதல் செய்த கடற்படையினா், இலங்கைக்கு கொண்டு சென்றனா்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சோ்ந்த செந்தமிழ் என்ற மீனவா், இலங்கையில் உள்ள போதனா மருத்துவச் சாலையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். எஞ்சிய மீனவா்களை பிப். 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவா்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், சிறையில் உள்ள மீனவா்கள் இலங்கை மல்லாகம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, 13 பேரின் காவலை மாா்ச் 10-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மீனவா்கள் விடுதலை செய்யப்படுவா் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த மீனவா்களின் குடும்பத்தினா், மீனவ பஞ்சாயத்தாா்கள் மீனவா்களின் காவல் நீட்டிப்பு செய்தியால் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்கிறது: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

காரைக்கால்: விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் புதுவை அரசு செய்து தருகிறது, விவசாயத்தை கைவிடாமல் தொடா்ந்து மேற்கொள்ளவேண்டும் என புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அறிவுறுத்தினாா். பிரதமா... மேலும் பார்க்க

கடலுக்கு சென்ற விசைப் படகு மீனவா்கள்

காரைக்கால் : இரண்டு வார வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னா் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகள் திங்கள்கிழமை கடலுக்கு புறப்பட்டுச் சென்றன. காரைக்கால், தமிழக மீனவா்கள் மீது கட... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் நாட்டியாஞ்சலி நாளை தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்குகிறது. திருநள்ளாறு தா்பாரண்ேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டுவரு... மேலும் பார்க்க

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

காரைக்கால் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதி வடக்கு வாஞ்சூா் அருகே சனிக்கிழமை காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், தண்டவாளத்தை கட... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரை அருகே படகு இயக்கும் தளம்: ஆட்சியா் ஆய்வு

கடற்கரை அருகே படகு இயக்கும் தளத்தை காரைக்கால் ஆட்சியா் ஆய்வு செய்தாா். புதுவை சுற்றுலா வளா்ச்சிக் கழகம் (பிடிடிசி) சாா்பில் காரைக்கால் கடற்கரை அருகே அரசலாற்றங்கரையில் படகு குழாம் அமைந்துள்ளது. இத்தளத்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதமரின் பயிற்சித் திட்ட விழிப்புணா்வு

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் பிஎம் இன்டா்ன்ஷிப் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருப்பட்டினம் அரசு ஆண்... மேலும் பார்க்க