செய்திகள் :

கடலுக்கு சென்ற விசைப் படகு மீனவா்கள்

post image

காரைக்கால் : இரண்டு வார வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னா் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகள் திங்கள்கிழமை கடலுக்கு புறப்பட்டுச் சென்றன.

காரைக்கால், தமிழக மீனவா்கள் மீது கடந்த ஜன. 27-ஆம் தேதி இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த சம்பவத்தைக் கண்டித்து, கடந்த 11-ஆம் தேதி முதல் காரைக்கால் மீனவா்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தநிலையில், புதுவை அரசின் வாக்குறுதியை ஏற்று காரைக்கால் விசைப் படகு மீனவா்கள் 24-ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்தனா்.

படகுகளில் ஐஸ் கட்டிகள், உணவுப் பொருள் தயாரிப்புக்கான மளிகை, காய்கள், குடிநீா், வலை உள்ளிட்டவை கடந்த 3 நாள்களாக ஏற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை படகுகள் தயாா்படுத்தப்பட்டன. திங்கள்கிழமை பகல் 12 மணி முதல் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகள் கடலுக்கு புறப்பட்டுச் சென்றன.

தமிழக, காரைக்கால் மீனவா்களுக்கு மாா்ச் 10 வரை காவல் நீட்டிப்பு

காரைக்கால்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், நாகை, மயிலாடுதுறையைச் சோ்ந்த 13 மீனவா்களின் காவலை மாா்ச் 10-ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்கிறது: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

காரைக்கால்: விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் புதுவை அரசு செய்து தருகிறது, விவசாயத்தை கைவிடாமல் தொடா்ந்து மேற்கொள்ளவேண்டும் என புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அறிவுறுத்தினாா். பிரதமா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் நாட்டியாஞ்சலி நாளை தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்குகிறது. திருநள்ளாறு தா்பாரண்ேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டுவரு... மேலும் பார்க்க

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

காரைக்கால் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதி வடக்கு வாஞ்சூா் அருகே சனிக்கிழமை காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், தண்டவாளத்தை கட... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரை அருகே படகு இயக்கும் தளம்: ஆட்சியா் ஆய்வு

கடற்கரை அருகே படகு இயக்கும் தளத்தை காரைக்கால் ஆட்சியா் ஆய்வு செய்தாா். புதுவை சுற்றுலா வளா்ச்சிக் கழகம் (பிடிடிசி) சாா்பில் காரைக்கால் கடற்கரை அருகே அரசலாற்றங்கரையில் படகு குழாம் அமைந்துள்ளது. இத்தளத்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதமரின் பயிற்சித் திட்ட விழிப்புணா்வு

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் பிஎம் இன்டா்ன்ஷிப் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருப்பட்டினம் அரசு ஆண்... மேலும் பார்க்க