செய்திகள் :

தமிழக மீனவர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ.3 லட்சம் பொருள்கள் அபகரிப்பு

post image

திருக்குவளை: வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை கத்தி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருள்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 15 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் கோவிந்தசாமி, ரமேஷ், வெற்றி, ரவி உள்ளிட்ட நான்கு பேர் கடலில் கோடியக்கரை வடக்கே 16 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, இரண்டு அதிவேக பைபர் படகில் அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி படகில் இருந்த இரண்டு இன்ஜினில் ஒரு இஞ்சின், 30 கிலோ மீன், இரண்டு செல்போன் பேட்டரி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட சுமார் ரூ. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள்களை பறித்துச் சென்றனர்.

இன்ஜினில் குறைந்த அளவு பெட்ரோலை வைத்து கரை திரும்ப முடியாமல் கடலில் தவித்துக் கொண்டிருந்த நிலையில், சக மீனவர்களிடம் எரிபொருள் வாங்கி கரை திரும்பினார். ரூ. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள்களை பறிகொடுத்த நிலையில் மீண்டும் கடல் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், மாதத்தில் இரண்டு மூன்று முறை இலங்கை கடல் கொள்ளையர்களால் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கும் மீனவர்கள், கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க சுதந்திரமாக தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு அரசு மீண்டும் கடலுக்கு தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை செருதூர் மீனவர்கள் இலங்கை கடல் கொள்ளையர்களால் தாக்கப்படம் சம்பவம் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில் தொலைதூரம் ச... மேலும் பார்க்க

ஹேக் செய்யப்பட்ட குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம்!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தனது எக்ஸ் கணக்கில் ஹேக்கர்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றியுள்ளதாகவும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் குஷ்பு கூறி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்... மேலும் பார்க்க

முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது கருப்புச் சாயம் பூச்சு!

உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர். காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கட... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!

நேபாளத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்தின் மூலம் நேபாளத்தின் பிரபல சுற்றுலாத் தளமான போகராவிற்கு 25-க்கும் ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் 9 ஒட்டகங்கள் பலியானதினால் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலோடியின் போஜஸார் பகுதியில் பரத்மாலா நெடுஞ்சாலையில் நேற்ற... மேலும் பார்க்க