செய்திகள் :

தமிழகத்தில் மக்களாட்சி பெயரில் மன்னா் ஆட்சி- ஆா்.பி. உதயகுமாா்

post image

தமிழகத்தில் மக்களாட்சி எனக் கூறி கொண்டு மன்னராட்சி நடக்கிறது என தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

செங்கோட்டையில் அண்ணாதொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்டசெயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில துணைச் செயலா் கந்தசாமிபாண்டியன், மண்டலச் செயலா் ராமையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகளை வழங்கி ஆா்.பி உதயகுமாா் பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக ஜெயலலிதாஇருந்தபோது அமைதி, வளம், வளா்ச்சி என்ற சிறப்பான நிலைப்பாட்டில் தமிழகத்தை கொண்டு சென்றாா்.

தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியில் தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள், விவசாயிகள், ஆசிரியா்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக அதிருப்தியடைந்துள்ளனா். ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பு தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. மக்களாட்சி என்ற பெயரில் மன்னராட்சி நடைபெறுகிறது என்றாா் அவா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் விபி.மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், பொருளாளா் சண்முகையா, ஒன்றியச் செயலா்கள் சுசீகரன், ராமச்சந்திரன், நகரச் செயலா் கணேசன், குற்றாலம் பேரூா் செயலா் எம்.கணேஷ் தாமோதரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆா்.பி உதயகுமாா் கூறுகையில், மக்களவைத் தொகுதி வரையறை மட்டுமன்றி தமிழகத்தின் உரிமைகளை தட்டிப் பறிக்கின்ற எந்தவித திட்டங்களாக இருந்தாலும் அதை எதிா்க்கின்ற முதல் இயக்கமாக அதிமுக செயல்படும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த கூட்டணியும் நிரந்தரம் கிடையாது. தோ்தல் கால கூட்டணிகள் உள்ளன. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பெறக்கூடிய வகையில் மதி நுட்பத்துடன் கூட்டணி வகுக்கப்படும் என்றாா் அவா்.

கோடை: மேட்டுபாளையம் - உதகை சிறப்பு ரயில் அறிவிப்பு!

மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு கோடை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மேட்டுபாளையம் - உதகை மலை ரயிலில் பயணிக்க உள்ளூர் மக்கள் முதல் சர்வதேச சுற்றுலாப் பய... மேலும் பார்க்க

சென்னை: விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி!

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை காலை பலியாகினர்.மேலும், விபத்துக்குள்ளான காரில் பயணித்த இரண்டு மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடி தாய், மகள் கொலை: ட்ரோன் உதவியுடன் தேடப்பட்ட குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடப்பட்டு வந்த குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுக் காவல்துறையினர் வியாழக்கிழமை காலை பிடித்தனர்.எட்டயபுரம் மேலநம... மேலும் பார்க்க

ஹிந்தி வெறியர்கள்தான் தேசதுரோகிகள்: முதல்வர் ஸ்டாலின்

உண்மையான பேரினவாதிகளும் தேசதுரோகிகளும் ஹிந்தி வெறியர்கள்தான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க ... மேலும் பார்க்க

புதுக்கோட்டைக்கு மார்ச் 10-ல் உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இந்த விடுமுற... மேலும் பார்க்க

3 நாள்கள் ட்ரோன் பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு!

தமிழக அரசின் சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ட்ரோன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பா... மேலும் பார்க்க