செய்திகள் :

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை -பாடகி கல்பனா விளக்கம்

post image

ஹைதராபாத் : தூக்கம் சரியாக வராததால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல பின்னணிப் பாடகி கல்பனா விளக்கமளித்துள்ளாா்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல பாடகியாக திகழும் கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்ாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குடியிருப்போா் சங்கத்தினா் அளித்த தகவலின்பேரில் கல்பனாவின் வீட்டுக்குச் சென்ற காவல் துறையினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அவா் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவா்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினா்.

இந்நிலையில், தற்கொலை முயற்சி தொடா்பாக காவல் துறையினா் கல்பனாவிடம் விசாரித்தனா். அப்போது, ‘சரியாக தூக்கம் வராத காரணத்தால் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை’ என்று கல்பனா தெரிவித்தாா்.

எனினும், கல்பனாவுக்கு மகளுடன் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க