செய்திகள் :

தற்பெருமை அதிகம், சாதனைகள் குறைவு: அமித் ஷா மீது காங்கிரஸ் விமா்சனம்

post image

புது தில்லி: இந்தியாவில் இதுவரை அமித் ஷாவை போல வேறெந்த எந்தவொரு மத்திய உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் தற்பெருமை பேச்சு அதிகமாகவும், சாதனைகள் குறைவாகவும் இருந்ததில்லை என்று காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை விமா்சித்தது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘11 ஆண்டுகால மோடி ஆட்சி பொதுச் சேவைக்கான பொற்காலமாகும். நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் முடிவுக்குவரும் தருணத்தில் உள்ளது. ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

இதற்குப் பதிலடி அளித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: ஜம்மு-காஷ்மீா் மற்றும் மணிப்பூரில் அமைதி ஏற்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தது மிகவும் விசித்திரமாக உள்ளது. இது தனது பெரும் தோல்விகளில் இருந்து பிறரின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும்.

கடந்த ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மணிப்பூா் தொடா்ந்து பற்றி எரிகிறது. அங்கு மிகத் தாமதமாக குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது துயரம் மிகுந்த தோல்வியாகும். இந்தியாவில் இதுவரை அமித் ஷாவை போல வேறு எந்தவொரு மத்திய உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் தற்பெருமை பேச்சு அதிகமாகவும், சாதனைகள் குறைவாகவும் இருந்ததில்லை எனத் தெரிவித்துள்ளாா்.

டிரம்ப்பிடம் பிரதமா் பேச வேண்டும்: அமெரிக்காவின் நியூயாா்க் விமான நிலையத்தில் இந்திய மாணவா் ஒருவரை நாடு கடத்தும் முன், அவருக்கு கை விலங்கிட்டு, தரையில் வலுக்கட்டாயமாக குப்புற படுக்கவைத்து மிருகத்தை பிடிப்பது போல அந்நாட்டு அதிகாரிகள் நடந்துகொண்ட காணொலி இணையத்தில் வெளியானது.

இதுதொடா்பாக ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவில் இந்தியா்கள் அநாகரிகமாக நடத்தப்படுவது குறித்தும், அவா்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடா்பாகவும் அந்நாட்டு அதிபா் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி பேச வேண்டும். இந்தியா்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்க வேண்டியது பிரதமா் மோடியின் தலையாய கடமை’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஆமதாபாத்தில் விமான சேவை நிறுத்தம்!

விமான விபத்தை அடுத்து ஆமதாபாத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் போயிங் 78... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்தில் 30 பேர் பலி? முதற்கட்ட தகவல்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 30 பேர் பலியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடம், குடியிருப்புப் பகுதி என்பதால்... மேலும் பார்க்க

விமானம் விழுந்தது விபத்தா? சம்பவமா? குழப்புகிறது ஏர் இந்தியா!

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதனை சம்பவம் எனக் குறிப்பிட்டு ஏர் இந்தியா நிர்வாகம் பதிவிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விம... மேலும் பார்க்க

படுகொலை செய்யப்பட்ட சித்து மூஸேவாலாவின் 3 புதிய பாடல்கள் ரிலீஸ்!

பஞ்சாபில் படுகொலை செய்யப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் 3 புதிய பாடல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா (27) மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 6... மேலும் பார்க்க

விமான விபத்து: மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு! - குஜராத் முதல்வர்

குஜராத் விமான விபத்தில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். குஜராத் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை!

ஏர் இந்தியா விமான விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் ம... மேலும் பார்க்க