செய்திகள் :

தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!

post image

திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் தொடங்கியது. விழா நடைபெறும் மேடைக்கு கட்சித் தலைவர் விஜய் வந்த நிலையில், அவரைப் பார்த்ததும், மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்கள் பலரும் கலைந்து செல்லத் தொடங்கினர்.

விழா இன்று மாலைதான் தொடங்கும் என்றாலும், முன்கூட்டியே காலையில் இருந்து ஏராளமான மக்கள் கூட்டத்துக்கு வந்துவிட்டனர்.

கடும் வெயில் காரணமாக அவதிக்குள்ளாகி வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள், விஜயை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு நேரம் காத்திருந்தது போல, அவரைப் பார்த்து, அவர் நடைமேடையில் நடந்து செல்வதைப் பார்த்து கோஷம் எழுப்பிய நிலையில், விழா தொடங்கியதுமே அவர்களும் புறப்படத் தொடங்கிவிட்டனர்.

இதுவரை திடல் முழுமையாக நிரம்பியிருந்த நிலையில், விழா தொடங்கியதும் பல இடங்கள் காலியாகிவிட்டன். சாலைகளில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால் பாரபத்தி திடலை விடவும் வெளியே கூட்டம் அலைமோதுவது போல காணப்படுகிறது.

பாஜகவுடன் நேரடிக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும்... யாரைச் சொல்கிறார் விஜய்?

பாஜகவுடன் ஒரு கட்சி நேரடியாகக் கூட்டணி வைத்திருக்கிறது, மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணியில் உள்ளது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.மதுரை மாவட்டம் ... மேலும் பார்க்க

அண்ணா, எம்ஜிஆர், கேப்டன்.. தவெக மாநாட்டில் குறிப்பிடப்பட்ட திராவிடத் தலைவர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய திராவிட கட்சிகளின் தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வருகின்றது. மதுரையில் நடைபெறும் தவெக-வின், 2-வது மாநில மாநாட்டில் இசையமைப்... மேலும் பார்க்க

கொள்கை எதிரி பாஜக; அரசியல் எதிரி திமுக! விஜய் பேச்சு

பாரபத்தி: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று குறிப்பிட்டார் கட்சித் தலைவர் விஜய்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் தொடங்கி ... மேலும் பார்க்க

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும்: விஜய்

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும், வேடிக்கைப் பார்க்க வராது என்று தவெக மாநாட்டில் விஜய் பேசினார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொ... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாது... மேலும் பார்க்க

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

வரும் 2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார்.கடந்த 1996ஆம் ஆண்டே அவர் மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை அ... மேலும் பார்க்க