செய்திகள் :

திமுக வேட்பாளர்கள் பி. வில்சன், சல்மா, சிவலிங்கம் யார்?

post image

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் தேதி வெளியான ஒரு சில நாள்களிலேயே வேட்பாளர்களை அறிவித்து திமுக அதிரடி காட்டியிருக்கிறது.

மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பெயர்களை கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வழக்குரைஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, சேலம் கிழக்கு மாவட்டச் செயலராக உள்ள எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புஷ்பநாதன் வில்சன்

மூத்த வழக்குரைஞர் புஷ்பநாதன் வில்சன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக கடந்த 2012 ஆகஸ்ட் முதல்வ 2014 மே வரை பதவி வகித்தவர். தமிழகத்தின் அரசு கூடுதல் வழக்குரைஞராகவும் 2008 ஆகஸ்ட் முதல் 2011 மே வரை பணியாற்றியவர்.

கவிஞர் சல்மா

கவிஞர் சல்மாவின் புனைப்பெயர் ராஜாத்தி. பிறகு அவர் ராஜாத்தி சல்மா எனவும் அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டின் சமகால கவிஞர்களில் மிக முக்கியமானவராகவும், முன்னோடி பாலின ஆர்வலராகவும் அறியப்படுவர். பல காலமாக திமுக உறுப்பினராக இருப்பவர்.

எஸ்ஆர் சிவலிங்கம்

தமிழக சட்டப்பேரவைக்கு 1989 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்டுத் தேர்வானவர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் (பாமக), என்.சந்திரசேகரன் (அதிமுக), எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ (திமுக சாா்பில் தோ்வு செய்யப்பட்டவா்கள்) ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதை முன்னிட்டே ஆறு மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்கான தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த முறை மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மறுக்கப்பட்டுள்ளது.விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தேமுதிக சார்பில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகப்பேறு விடுப்பு! அரசு பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம்! அரசாணை சொல்வது என்ன?

தமிழக அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மகப்பேறு விடுப்புக் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ஒரே கருவியை பயன்படுத்திய பல் மருத்துவமனை! 8 பேர் பலி

திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியால் பல் சிகிச்சை மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

7வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு!

ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.ப... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுத... மேலும் பார்க்க

கமல்ஹாசன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை: அப்பாவு

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தி... மேலும் பார்க்க