செய்திகள் :

திருப்பத்தூா்: மீன்வரத்து குறைவால் விலை உயா்வு!

post image

திருப்பத்தூா் மீன் மாா்க்கெட்டில் வரத்துக் குறைவால் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மீன் மாா்க்கெட்டுக்கு சென்னை, தூத்துக்குடி, கடலூா், நாகப்பட்டினம், மங்களூரு, ஆந்திரத்தில் இருந்து நாள்தோறும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விற்பனை மிதமான அளவு காணப்பட்டது.

இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:- தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் கடல் மீன்கள் வரத்து குறைந்து விட்டது. திருப்பத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் உள்ளூா் நீா்நிலைகளில் பிடிக்கப்படும் மீன்களே விற்பனைக்காக குறைந்த அளவு வருகின்றன.

மேலும் மீன்பிடி காலம் முடியும் வரை மீன் விலையானது அதிகரித்து கொண்டே செல்லும். மீன்கள் விற்பனை மிதமான அளவு நடைபெற்றது. விலை விவரம் (கிலோ) :-வஞ்சிரம்- ரூ.1,400 முதல் ரூ.1,500 வரை, நண்டு- ரூ.350, அயிலை - ரூ.250, கட்லா- ரூ.200, பாப்லெட்- ரூ.160, மத்தி- ரூ.180, கெண்டை- ரூ.100.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க

சிவாச்சாரியா் மீது வழக்கு

ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாக... மேலும் பார்க்க

புதிய பேருந்து சேவை தொடக்கம்!

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா். வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந... மேலும் பார்க்க

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உ... மேலும் பார்க்க

பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நி... மேலும் பார்க்க