செய்திகள் :

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

post image

இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பால், திருப்பூரில் பின்னலாடைத் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரியால், திருப்பூரில் பல சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அமெரிக்காவுக்குச் செல்லும் ஏற்றுமதியில் 30 முதல் 35 சதவிகிதம் வரை திருப்பூர் பங்களிக்கும் நிலையில், அமெரிக்காவின் வரியால், திருப்பூர் பின்னலாடைத் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

2024 - 25 நிதியாண்டில், திருப்பூர் பின்னலாடைத் தொழில் ரூ. 40,000 கோடி மதிப்பு பொருள்களை ஏற்றுமதி செய்தது. மேலும் நடப்பு நிதியாண்டில் 25 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது திருப்பூர் ஒரு பெரிய மந்தநிலையைச் சந்தித்து வருகிறது.

திருப்பூரின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கானது, அமெரிக்காவுக்குச் செல்லும் நிலையில், அமெரிக்காவின் ஆர்டர் குறைந்து, பல சிறு, குறு நிறுவனங்கள் கட்டாய ஆள்குறைப்பு நடவடிக்கைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஆர்டர் கொடுப்பதால், திருப்பூர் நிறுவனங்கள் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கும். மேலும், அமெரிக்கா மதிப்புகூட்டப்பட்ட பொருள்களைக் (எம்பிராய்டரி, பிரிண்டிங்) கேட்பதில்லை. சாதாரண ஆடைகளைத்தான் அவர்கள் வாங்குகிறார்கள்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தென் ஆப்பிரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற மாற்றுச் சந்தைகளை ஆராய்ந்து வந்தாலும், ஒரு வலுவான இருப்பை நிலைநிறுத்த குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படும்.

Tiruppur: Small and micro enterprises forced to face forced downsizing due to US tariff

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

குலசேகரப்பட்டினத்தில் தசரா கொண்டாட்டத்தின் கடைசி நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறவுள்ளது.தசரா விழாக் கொண்டாட்டத்தில், மைசூருக்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம்தான். திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள ... மேலும் பார்க்க

கரூர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது எம்.பி.க்கள் குழு உரிமை மீறல் தீர்மானம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க மறுத்ததால், அம்மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கு... மேலும் பார்க்க

முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை!

ராமநாதபுரத்தில் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைப்பதற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று ராமநாதபுரத்துக்கு வருகை தருகிறார்.ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து க... மேலும் பார்க்க

5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின், மது... மேலும் பார்க்க

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

கரூர் சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி பதட்டப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூர் தவெக பொதுக்கூட்டத்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை மாவட்ட காவல் கண... மேலும் பார்க்க