செய்திகள் :

கரூர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது எம்.பி.க்கள் குழு உரிமை மீறல் தீர்மானம்!

post image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க மறுத்ததால், அம்மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஹேமமாலின் எம்.பி. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அக்கூட்டணிக் கட்சிகள் அமைத்தன.

இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு விளக்கமளிக்க கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை தொடர்புகொண்ட போது, அவர்கள் மறுத்து விட்டதாகக் கூறி, அவர்கள் இருவர் மீது உரிமைமீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி யாதவ் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், ``மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். பல வழிகளில் அவர்களுக்கு அழைப்பு விடுத்தும் எங்களை சந்திக்க மறுத்து விட்டனர்.

எனவே, எங்கள் குழுவில் இருக்கும் 8 எம்.பி.க்களும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துள்ளோம்.

நாடாளுமன்றக் குழுவைச் சந்திக்க கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் மறுத்ததால், அவர்கள் இருவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர எங்கள் எம்.பி.க்கள் குழு முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

Tejasvi Surya and NDA MPs announced Privilege Motion against Karur District Collector and SP on TVK Vijay Stampede

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

குலசேகரப்பட்டினத்தில் தசரா கொண்டாட்டத்தின் கடைசி நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறவுள்ளது.தசரா விழாக் கொண்டாட்டத்தில், மைசூருக்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம்தான். திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள ... மேலும் பார்க்க

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பால், திருப்பூரில் பின்னலாடைத் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரியால், திருப்பூரில் பல சிறு, குறு பின்னலாடை நிறுவனங்க... மேலும் பார்க்க

முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை!

ராமநாதபுரத்தில் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைப்பதற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று ராமநாதபுரத்துக்கு வருகை தருகிறார்.ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து க... மேலும் பார்க்க

5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின், மது... மேலும் பார்க்க

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

கரூர் சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி பதட்டப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூர் தவெக பொதுக்கூட்டத்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை மாவட்ட காவல் கண... மேலும் பார்க்க