செய்திகள் :

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

post image

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புக்கு (ETFA) இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதன்மூலம், அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து இந்தியா பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து அவர் பேசுகையில், ``வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் 4 நாடுகளில் இருந்து 100 பில்லியன் டாலர் முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி, கூடுதலாக 150 பில்லியன் டாலர் எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லீக்டன்ஸ்டைன் ஆகிய நான்கு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன’’ என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்த எக்ஸ் பதிவில் அவர், ``இந்தியா- ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதால், உண்மையிலேயே இது ஒரு வரலாற்று நாள்.

இது வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்து, நமது மக்களுக்கும் வணிகங்களுக்கும் பயனளிக்கும்.

இருவருக்கும் பகிரப்பட்ட, இந்திய பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

India looks at USD 250 bn investments from EFTA nations: Goyal

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

குஜராத்தில் அன்னை அம்பாஜி கோயில் கண்காட்சியில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குஜராத்தில் அன்னை அம்பாஜியில் நடைபெற்ற பத்ராவி பூர்ணிமா எனும் பிரமாண்டமான மாபெரும் கண்காட்சியில் 40 ல... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தின் உன்ஹெல் நாகேஷ்வர் நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் வசித்து வந்தவ... மேலும் பார்க்க

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

தங்கத்தை பாஜகவினர் பதுக்குவதால்தான் விலை அதிகரிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.தங்கத்தின் விலை சமீபத்தில் அதிகளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், குடிமக்களிடையே அதி... மேலும் பார்க்க

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

துபை சர்வதேச மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை தேசத் துரோகிகள் கண்டு ரசித்ததாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா்உத்தவ் தாக்கரே புதன்கிழமை தெரிவித்தார். இதுகுற... மேலும் பார்க்க