செய்திகள் :

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

post image

தங்கத்தை பாஜகவினர் பதுக்குவதால்தான் விலை அதிகரிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

தங்கத்தின் விலை சமீபத்தில் அதிகளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், குடிமக்களிடையே அதிகரித்து வரும் தேவையின் விளைவாக தங்கத்தின் விலை அதிகரிக்கவில்லை; மாறாக தங்கத்தை பாஜகவினர் பதுக்குவதால்தான் விலை அதிகரிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ``ஏழை மனிதன் ஒருவர், தனது குடும்பத்தினரின் திருமணத்தில் ஒரு கிராம் தங்கம்கூட கொடுக்க முடிவதில்லை. தங்கம் ஒருபுறம் இருக்கட்டும்; தற்போது பாஜக பதுக்கி வைப்பதால் வெள்ளியும் ஏழை மக்களுக்கு எட்டுவதில்லை.

பாஜகவினர், தங்கள் கறுப்புப் பணத்தை திடமான சொத்துகளாக மாற்றும் தங்கமயமாக்கல் செயல்முறையே இதற்குக் காரணம். சர்வதேச சந்தையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தபோதிலும், ஆடம்பர உலோகங்களின் விலை ஏன் தொடர்ந்து உயர்கிறது? என்பதை அரசு விளக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ``ட்ரோன்கள், தொலைநோக்கிகள், புல்டோசர்கள் ஆகியவை அரசியல் எதிரிகளுக்கு மட்டும்தான் பொருந்துமா? தங்கத்தைப் பதுக்குபவர்களைக் கண்காணிக்க வேண்டாமா?’’ என்றும் விமர்சித்துள்ளார்.

 Samajwadi Party President Akhilesh Yadav hits out at Centre as gold prices cross Rs 1 lakh; accuses BJP of hoarding black money

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

குஜராத்தில் அன்னை அம்பாஜி கோயில் கண்காட்சியில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குஜராத்தில் அன்னை அம்பாஜியில் நடைபெற்ற பத்ராவி பூர்ணிமா எனும் பிரமாண்டமான மாபெரும் கண்காட்சியில் 40 ல... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தின் உன்ஹெல் நாகேஷ்வர் நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் வசித்து வந்தவ... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புக்கு (ETFA) இடையே தடையற்ற வர்த்தக ... மேலும் பார்க்க

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2... மேலும் பார்க்க

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

துபை சர்வதேச மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை தேசத் துரோகிகள் கண்டு ரசித்ததாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா்உத்தவ் தாக்கரே புதன்கிழமை தெரிவித்தார். இதுகுற... மேலும் பார்க்க